ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

May 14, 2024,02:17 PM IST

திருப்பூர்: திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.


கோடைக்காலத்தில் தான் தொடங்குகிறது மாம்பழ சீசன். முக்கனிகளில் ஒன்றாக இருப்பது மா. மாம்பழங்களை பார்த்தாலே அதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஏன் தெரியுமா? அதன் கலரும், அதன் வாசனையும் நம்மை சுண்டி இழுக்கும். மாம்பழங்களில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது இந்த மாம்பழங்கள். 


இப்படிப்பட்ட சத்தும் சுவையும் மிகுந்த மாம்பழம் சீசன் தற்பொழுது தொடங்கியுள்ளது. மாம்பழ சீசன் வந்தாலே, அதனுடன் சேர்ந்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களும் வந்து விடுகின்றன. ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களால்  உடல் உபாதைகள், தலைவலி, உடல்சூடு, மயக்கம், தலை சுற்றல், தீராத வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை ஏற்படும். ஆதலால் இந்த முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அரசு தடை செய்துள்ளது. 




இருப்பினும் சந்தைகளில்  ரசாயன முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் அதிக அளவில் விற்கப்பட்டு வருகின்றன. அவற்றை தடுப்பதற்கு சுகாதாரத்துறை எவ்வளவு முயற்ச்சி செய்தாலும் தடுக்க முடியாத அளவிற்கு ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்கப்பட்டு தான் வருகிறது.


இந்நிலையில்,  இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் சந்தையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த சந்தைகளில் உள்ள 102 பழக்கடைகளிலும் ஆய்வு செய்தனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 12 கடைகள் விதிமுறைகள் மீறி மாம்பழங்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. இதை மீறி மீண்டும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்