திருப்பூர்: திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோடைக்காலத்தில் தான் தொடங்குகிறது மாம்பழ சீசன். முக்கனிகளில் ஒன்றாக இருப்பது மா. மாம்பழங்களை பார்த்தாலே அதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஏன் தெரியுமா? அதன் கலரும், அதன் வாசனையும் நம்மை சுண்டி இழுக்கும். மாம்பழங்களில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது இந்த மாம்பழங்கள்.
இப்படிப்பட்ட சத்தும் சுவையும் மிகுந்த மாம்பழம் சீசன் தற்பொழுது தொடங்கியுள்ளது. மாம்பழ சீசன் வந்தாலே, அதனுடன் சேர்ந்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களும் வந்து விடுகின்றன. ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களால் உடல் உபாதைகள், தலைவலி, உடல்சூடு, மயக்கம், தலை சுற்றல், தீராத வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை ஏற்படும். ஆதலால் இந்த முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அரசு தடை செய்துள்ளது.
இருப்பினும் சந்தைகளில் ரசாயன முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் அதிக அளவில் விற்கப்பட்டு வருகின்றன. அவற்றை தடுப்பதற்கு சுகாதாரத்துறை எவ்வளவு முயற்ச்சி செய்தாலும் தடுக்க முடியாத அளவிற்கு ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்கப்பட்டு தான் வருகிறது.
இந்நிலையில், இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் சந்தையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த சந்தைகளில் உள்ள 102 பழக்கடைகளிலும் ஆய்வு செய்தனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 12 கடைகள் விதிமுறைகள் மீறி மாம்பழங்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. இதை மீறி மீண்டும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
{{comments.comment}}