ராமநாதபுரம்: ராமாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 5 வேட்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் போட்டியிடுவதால், ராமநாதபுரம் வாக்காளர்கள் திக்குமுக்காடப் போகிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது ராமநாதபுரம். இத்தொகுதியில்தான் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் பல வேட்பாளர்கள் இங்கு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது எடப்பாடி பழனிச்சாமியின் அல்லக்கைகளின் செயல் என்று ஓ.பி.எஸ்ஸின் மகன் ஜெய பிரதீப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல இந்த செயல் கீழ்த்தரமானது என்று இன்னொரு மகனான தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தும் சாடியுள்ளார்.

இந்த நிலையில் இன்று நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதேபோல மேலும் நான்கு ஓ.பன்னீர் செல்வத்தின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்கள்தான் குழம்பிப் போகப் போகிறார்கள். சின்னத்தைப் பார்த்து தெளிவாக ஓட்டுப் போட்டால் பிரச்சினை வராது, ஆனால் பெயரைப் பார்த்து ஓட்டுப் போட்டால் குழப்பம்தான் வரும்.
ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம் பெயரிலான பிற வேட்பாளர்கள் விவரம்:
ஒச்சப்பன் பன்னீர் செல்வம் (உசிலம்பட்டி, மதுரை)
ஒய்யாரம் பன்னீர் செல்வம் (தெற்கு காட்டூர், ராமநாதபுரம்)
ஒச்சாத்தேவர் பன்னீர் செல்வம் (வாகைக்குளம், மதுரை)
ஒய்யாத்தேவர் பன்னீர் செல்வம் (சோலை அழகுபுரம், மதுரை)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}