ராமநாதபுரம்: ராமாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 5 வேட்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் போட்டியிடுவதால், ராமநாதபுரம் வாக்காளர்கள் திக்குமுக்காடப் போகிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது ராமநாதபுரம். இத்தொகுதியில்தான் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் பல வேட்பாளர்கள் இங்கு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது எடப்பாடி பழனிச்சாமியின் அல்லக்கைகளின் செயல் என்று ஓ.பி.எஸ்ஸின் மகன் ஜெய பிரதீப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல இந்த செயல் கீழ்த்தரமானது என்று இன்னொரு மகனான தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தும் சாடியுள்ளார்.
இந்த நிலையில் இன்று நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதேபோல மேலும் நான்கு ஓ.பன்னீர் செல்வத்தின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்கள்தான் குழம்பிப் போகப் போகிறார்கள். சின்னத்தைப் பார்த்து தெளிவாக ஓட்டுப் போட்டால் பிரச்சினை வராது, ஆனால் பெயரைப் பார்த்து ஓட்டுப் போட்டால் குழப்பம்தான் வரும்.
ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம் பெயரிலான பிற வேட்பாளர்கள் விவரம்:
ஒச்சப்பன் பன்னீர் செல்வம் (உசிலம்பட்டி, மதுரை)
ஒய்யாரம் பன்னீர் செல்வம் (தெற்கு காட்டூர், ராமநாதபுரம்)
ஒச்சாத்தேவர் பன்னீர் செல்வம் (வாகைக்குளம், மதுரை)
ஒய்யாத்தேவர் பன்னீர் செல்வம் (சோலை அழகுபுரம், மதுரை)
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}