சென்னை: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் இயங்கலாம். ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது என போக்குவரத்து துறை சுற்றறிக்கை குறித்து அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:

பைக் டாக்சிகளை இயக்குவதற்கு தடை எதுவும் இல்லை. மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்சிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. பைக் டாக்சிகளில் பயணிக்கும் பயணிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் அவர்களின் தொழிலுக்கு இது பாதிப்பாக இருப்பதாக கூறி நேற்று புகார் தெரிவித்திருந்தனர். அந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் விதி மீறல் இல்லாமல் பைக்குகள் ஓட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய அரசும், நீதிமன்றமும் என்ன முடிவுக்கு வருகிறதோ, அந்த அடிப்படையில் தான் நாமும் செயல்பட முடியும். எனவே அதை எதிர் நோக்கி நாமும் செயல்பட முடியும். தமிழ்நாட்டில் பல்வேறு விஷயங்களில் நாம் தனித்துவமாக இருந்தாலும், சில நேரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு என்ன தேவை இருக்கிறதோ அதை ஒட்டியும் செல்ல வேண்டி இருக்கிறது. ஆம்னி பேருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்தியா முழுவதிலும் இருக்கின்ற ஒரே நடைமுறை தான் நாமும் செயல்படுத்துகின்றோம்.
இப்போதைக்கு இயங்குகின்ற ஊர்திகள் இயங்கலாம். வீதி மீறல்கள் இருக்கக் கூடாது என்பது தான் மிக முக்கியமானது. இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். ஓட்டுனருக்கு லைசன்ஸ் இருக்க வேண்டும். வாகனம் எப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் இருக்க வேண்டும். சிறு விபத்து நடந்தால் கூட பின்னால் அமர்ந்துள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது. அதையெல்லாம் கவனத்திற்கு கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}