சென்னை: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் இயங்கலாம். ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது என போக்குவரத்து துறை சுற்றறிக்கை குறித்து அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:
பைக் டாக்சிகளை இயக்குவதற்கு தடை எதுவும் இல்லை. மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்சிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. பைக் டாக்சிகளில் பயணிக்கும் பயணிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் அவர்களின் தொழிலுக்கு இது பாதிப்பாக இருப்பதாக கூறி நேற்று புகார் தெரிவித்திருந்தனர். அந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் விதி மீறல் இல்லாமல் பைக்குகள் ஓட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய அரசும், நீதிமன்றமும் என்ன முடிவுக்கு வருகிறதோ, அந்த அடிப்படையில் தான் நாமும் செயல்பட முடியும். எனவே அதை எதிர் நோக்கி நாமும் செயல்பட முடியும். தமிழ்நாட்டில் பல்வேறு விஷயங்களில் நாம் தனித்துவமாக இருந்தாலும், சில நேரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு என்ன தேவை இருக்கிறதோ அதை ஒட்டியும் செல்ல வேண்டி இருக்கிறது. ஆம்னி பேருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்தியா முழுவதிலும் இருக்கின்ற ஒரே நடைமுறை தான் நாமும் செயல்படுத்துகின்றோம்.
இப்போதைக்கு இயங்குகின்ற ஊர்திகள் இயங்கலாம். வீதி மீறல்கள் இருக்கக் கூடாது என்பது தான் மிக முக்கியமானது. இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். ஓட்டுனருக்கு லைசன்ஸ் இருக்க வேண்டும். வாகனம் எப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் இருக்க வேண்டும். சிறு விபத்து நடந்தால் கூட பின்னால் அமர்ந்துள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது. அதையெல்லாம் கவனத்திற்கு கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!
ஆபரேஷன் சிந்தூர் அதிரடி எதிரொலி.. பாதுகாப்புத்துறை பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு
ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்கம்
இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Maman movie: ஏண்டா தம்பிகளா, மண் சோறு சாப்பிட்டா எப்படிடா படம் ஓடும்.. நடிகர் சூரி ஆதங்கம்!
நிதி ஆயோக் கூட்டம்: மே 24 முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்!
ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கிறேன்.. இப்படியே இருக்கப் போறேன்.. அண்ணாமலை
தமிழகத்தில்.. பள்ளிகள் திறப்பு எப்போது..? தேதி அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
{{comments.comment}}