திருப்பதி கோவிலுக்கு வந்த பெண் தலை மீது மரக் கிளை விழுந்ததில்.. படுகாயம்

Jul 12, 2024,02:01 PM IST

திருப்பதி:   ஆந்திர மாநிலம் திருப்பதியில் கோவிலுக்கு வந்த பெண் தலை மீது மரக் கிளை விழுந்ததில் அந்தப் பெண் படுகாயமடைந்தார்.


திருப்பதியில் ஜபாலி ஆஞ்சநேயசாமி கோவில் உள்ளது. திருப்பதி மலையில் இந்தக் கோவில் உள்ளது. திருப்பதிக்கு வருவோர் இந்தக் கோவிலுக்கும் வருவது வழக்கம். இந்த நிலையில் ஒரு பெண் தனது குடும்பத்தினரோடு சாமி கும்பிடச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் இருந்த மரத்திலிருந்து பெரிய கிளை ஒன்று அப்படியே அந்தப் பெண் தலை மீது விழுந்தது.




கிளை விழுந்த வேகத்தில் அந்தப்  பெண்  அப்படியே கீழே விழுந்து மூர்ச்சையானார். இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஆபத்து ஏதும் இல்லை. சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தலை மற்றும் கழுத்து எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்ற பெண்ணின் தலை மீது மரக் கிளை விழுவதை அங்கிருந்த ஒரு பக்தர் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்