திருப்பதி கோவிலுக்கு வந்த பெண் தலை மீது மரக் கிளை விழுந்ததில்.. படுகாயம்

Jul 12, 2024,02:01 PM IST

திருப்பதி:   ஆந்திர மாநிலம் திருப்பதியில் கோவிலுக்கு வந்த பெண் தலை மீது மரக் கிளை விழுந்ததில் அந்தப் பெண் படுகாயமடைந்தார்.


திருப்பதியில் ஜபாலி ஆஞ்சநேயசாமி கோவில் உள்ளது. திருப்பதி மலையில் இந்தக் கோவில் உள்ளது. திருப்பதிக்கு வருவோர் இந்தக் கோவிலுக்கும் வருவது வழக்கம். இந்த நிலையில் ஒரு பெண் தனது குடும்பத்தினரோடு சாமி கும்பிடச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் இருந்த மரத்திலிருந்து பெரிய கிளை ஒன்று அப்படியே அந்தப் பெண் தலை மீது விழுந்தது.




கிளை விழுந்த வேகத்தில் அந்தப்  பெண்  அப்படியே கீழே விழுந்து மூர்ச்சையானார். இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஆபத்து ஏதும் இல்லை. சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தலை மற்றும் கழுத்து எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்ற பெண்ணின் தலை மீது மரக் கிளை விழுவதை அங்கிருந்த ஒரு பக்தர் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்