திருப்பதி கோவிலுக்கு வந்த பெண் தலை மீது மரக் கிளை விழுந்ததில்.. படுகாயம்

Jul 12, 2024,02:01 PM IST

திருப்பதி:   ஆந்திர மாநிலம் திருப்பதியில் கோவிலுக்கு வந்த பெண் தலை மீது மரக் கிளை விழுந்ததில் அந்தப் பெண் படுகாயமடைந்தார்.


திருப்பதியில் ஜபாலி ஆஞ்சநேயசாமி கோவில் உள்ளது. திருப்பதி மலையில் இந்தக் கோவில் உள்ளது. திருப்பதிக்கு வருவோர் இந்தக் கோவிலுக்கும் வருவது வழக்கம். இந்த நிலையில் ஒரு பெண் தனது குடும்பத்தினரோடு சாமி கும்பிடச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் இருந்த மரத்திலிருந்து பெரிய கிளை ஒன்று அப்படியே அந்தப் பெண் தலை மீது விழுந்தது.




கிளை விழுந்த வேகத்தில் அந்தப்  பெண்  அப்படியே கீழே விழுந்து மூர்ச்சையானார். இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஆபத்து ஏதும் இல்லை. சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தலை மற்றும் கழுத்து எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்ற பெண்ணின் தலை மீது மரக் கிளை விழுவதை அங்கிருந்த ஒரு பக்தர் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Time to Lead: இனி அரசியல் மாறும்.. தலைவர்கள் மாறுவார்கள்.. விஜய் போட்ட புதிய பாதை!

news

வெற்றியை நிர்ணயிக்க போகும் 119 தொகுதிகள்...நொடிக்கு நொடி மாறும் முன்னிலை

news

TVK wins: தவெகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்?

news

ஜஸ்ட் மிஸ் ஆனாரா எடப்பாடி பழனிச்சாமி?.. விஜய் ஆதரவு சுயேச்சை வாங்கிய ஓட்டுக்களைப் பாருங்க!

news

அதிர வைத்த எடப்பாடி பழனிச்சாமி வியூகம்.. திமுகவுக்கு 2வது இடம் கூட கிடைக்கலையே!

news

திராவிட மாடலுக்கு இது தோல்வியா?.. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்...சொல்வது என்ன?

news

சட்டசபையில்.. தவெக விற்கு பெரும்பான்மை கிடைக்கா விட்டால் என்ன செய்வார் விஜய்?

news

மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கும் மம்தா பானர்ஜி... அதிரடி காட்டிய பாஜக முன்னிலை!

news

அடிச்ச பத்து பேருமே டான்தான்.. தமிழ்நாட்டு அரசியலைப் புரட்டிப் போட்ட விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்