திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் கோவிலுக்கு வந்த பெண் தலை மீது மரக் கிளை விழுந்ததில் அந்தப் பெண் படுகாயமடைந்தார்.
திருப்பதியில் ஜபாலி ஆஞ்சநேயசாமி கோவில் உள்ளது. திருப்பதி மலையில் இந்தக் கோவில் உள்ளது. திருப்பதிக்கு வருவோர் இந்தக் கோவிலுக்கும் வருவது வழக்கம். இந்த நிலையில் ஒரு பெண் தனது குடும்பத்தினரோடு சாமி கும்பிடச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் இருந்த மரத்திலிருந்து பெரிய கிளை ஒன்று அப்படியே அந்தப் பெண் தலை மீது விழுந்தது.
கிளை விழுந்த வேகத்தில் அந்தப் பெண் அப்படியே கீழே விழுந்து மூர்ச்சையானார். இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஆபத்து ஏதும் இல்லை. சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தலை மற்றும் கழுத்து எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்ற பெண்ணின் தலை மீது மரக் கிளை விழுவதை அங்கிருந்த ஒரு பக்தர் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}