திரியம்பகாஷ்டமி.. பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி.. காலபைரவர் அவதரித்த திதி!

Mar 21, 2025,02:13 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஓம் பைரவனே போற்றி! 

ஓம் அஷ்டரூபனே போற்றி! 

ஓம் அஷ்டமி தோன்றலே போற்றி!

ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி!

ஓம் ஆனந்த பைரவனே போற்றி! 

ஓம் ஆலய காவலனே போற்றி!


மார்ச் -22   20 25 பங்குனி மாதம், எட்டாம் நாள், சனிக்கிழமை அன்று தேய்பிறை அதாவது ஒவ்வொரு மாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும் அஷ்டமி திதி ஆகும். அன்று காலபைரவர் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது. இந்த தேய்பிறை அஷ்டமியில்  திரியம் பகாஷ்டமி என்று சிவாலயங்களில் பைரவருக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறும்.


அஷ்டமி திதி தான் சிவபெருமானின் உக்கிர வடிவங்களில் ஒருவரான காலபைரவர் அவதரித்த திதியாகும்.




ஸ்ரீ கால பைரவர்


கபாலத்தை கையில் ஏந்தியவர். காதுகளில் அழகிய குண்டலங்களை தரித்து இருப்பவர் .கையில் தண்டத்தை வைத்திருக்கும் இவர் கருமை நிறமுடையவர். சர்ப்பத்தை பூணூலாக கொண்டவர். போர்க்களத்தில் காட்சி தருபவர் .இடையூறுகளை மாய்த்து தம் பக்தருக்கு இன்பம் அளிப்பவர்.


நேரம்: பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி மார்ச் 22 அன்று 1:.01 a m முதல் மார்ச் 23   1:41 am வரை. சனிக்கிழமை 22ஆம் தேதி நாள் முழுவதும் அஷ்டமி திதி உள்ளது.


இன்றைய நாள் சனீஸ்வரனின் எதிர்மறை தாக்கம், சனி பெயர்ச்சிக்கான பரிகாரமாக அமைந்திருப்பது மிகுந்த விசேஷமாக உள்ளது. சனிக்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கினால், சனி தோஷம் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது ஐதீகம்.


பங்குனி தேய்பிறை அஷ்டமி வழிபடும் முறை


சிவாலயங்களில் முதல் பூஜை விநாயகருக்கும், கடைசி பூஜை பைரவருக்கும் நடக்கும். சூரியன் அஸ்தமன நேரத்தில் பைரவருக்கு அஷ்டமி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. சிவாலயத்திற்கு சென்று அபிஷேக பொருட்கள் வாங்கிக்  கொடுக்கலாம். அரளி பூ மாலை, முக்கியமாக செவ்வரளி மாலை, எழுமிச்சம்பழ மாலை,, ரோஜாப்பூ மாலை, சிவப்பு வஸ்திரம் வாங்கிச் செல்லலாம். வடை மாலை சாற்றி வழிபடுவது மிகச்சிறந்தது. நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் அவரவர் வேண்டுதல்கள் நிறைவேறும். மிளகு தீப வழிபாடு செய்வது அதீத நன்மை பயக்கும்.


தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சனி ,ராகு போன்ற கிரகங்களின் நன்மைகளை தரக்கூடியது. வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, பண பிரச்சினைகள் குடும்ப பிரச்சினைகள் நிவர்த்தி ஆகும் .செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.


வீட்டில் பைரவாஷ்டகம் பைரவ போற்றி பாராயணம் செய்து, விளக்கேற்றி, மனதார வேண்டுபவர்களுக்கு மன அமைதி ,உடல்நலம், நீள் ஆயுள் ,நிறை செல்வம், உயர் புகழ் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை .காலத்தினால் தீராத பிரச்சனைகள் தொல்லைகள் நீங்கும். நல் அருள் கிட்டும்.


மேலும் இது போன்ற ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்

news

ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!

news

Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!

news

CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள

news

எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!

news

திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்

news

தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!

news

தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!

news

போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்