திருப்பதி லட்டில் தரமில்லாத நெய்.. விலங்கு கொழுப்பு கலந்தது உண்மையே.. தேவஸ்தானம் பகீர் தகவல்!

Sep 20, 2024,05:25 PM IST

திருப்பதி : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிப்பதற்கு தரம் குறைந்த நெய் பயன்படுத்தப்பட்டது உண்மை தான். இது சோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளது அவைனரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருந்தார். ஆனால் இது பொய் என ஜெகன் மோகன் ரெட்டி கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. திருப்பதி லட்டு தயாரிப்பிற்கு நெய் விநியோகம் செய்யும் தமிழகத்தின் திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்., டெய்ரி நிறுவனமும், தாங்கள் தரமான நெய்யை தான் திருப்பதிக்கு அனுப்பி வருவதாகவும் கூறி இருந்தது. 




இந்நிலையில் திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமானதால் இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தான இஓ ஷியாமளா ராவ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், நான் தேவஸ்தானத்தின் புதிய இஓ.,வாக பதிவியேற்றதுமே திருப்பதி லட்டிற்கு பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்து முதல்வர் என்னிடம் வேதனை தெரிவித்தார். இதனையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தில் கவனம் செலுத்த துவங்கினோம். விநாயோகஸ்தர்களிடம் தரமான நெய்யை அனுப்பாவிட்டால் தடை செய்யப்படுவீர்கள் என எச்சரித்திருந்தோம்.


இதைத் தொடர்ந்து தமிழகத்தின் ஏ.ஆர்.,டைரி ஃபுட்ஸ் நிறுவனத்தை தவிர மற்ற நிறுவனங்கள் நெய்யின் தரத்தை அதிகப்படுத்தி வழங்கினர். நெய்யின் தரத்தை துல்லியாக கண்டறியும் ஆய்வகங்கள் எங்களிடம் இல்லை. அதனால் டெண்டர் மூலம் விலையின் அடிப்படையில் மட்டும் நெய் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. பிறகு லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை சர்வதேச ஏற்றுமதியாளர்கள், நெய்யின் தரத்தை கண்டறிய பயன்படுத்தும் ஆய்வகத்திற்கு நெய் மாதிரிகளை அனுப்பி பரிசோதனை செய்தோம். அதில் துரதிஷ்டவசமாக மோசமான அறிக்கையே கிடைத்தது.


ஆய்வு அறிக்கையில் நாங்கள் அனுப்பிய நெய் மாதிரியின் தாவர மற்றும் விலங்கு கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டது. விலங்கு கொழுப்பு என்பது பன்றியின் கொழுப்பு, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் உள்ளிட்டவைகள் கலந்ததாக உள்ளது. சுத்தமான பசு நெய்யின் தர புள்ளி என்பது 95.68 முதல் 104.32 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் ஆய்விற்காக அனுப்பிய நெய்யின் தரம் வெறும் 20 புள்ளிகளை கொண்டதாக மட்டுமே இருந்தது. 


இதனால் நெய்யின் தரத்தை பரிசோதிக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. எங்களுக்கென தனியாக பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும் என்றார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?

news

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

அதிகம் பார்க்கும் செய்திகள்