வாட்ஸ்ஆப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு... ஆந்திர மாநில அரசு சொல்வது என்ன?

Feb 17, 2025,06:30 PM IST

திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய் செல்லும் பக்தர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் மூலமாக தரிசன டிக்கெட்டை புக் செய்து கொள்ளும் புதிய முறையை ஆந்திர அரசின் வழிகாட்டுதலின் பேரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தரிசன டிக்கெட் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தானம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Whatsapp Governance ஐ வலியுறுத்தும் வகையில் மக்களுக்காக அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் மூலம் வழங்க சந்திரபாபு நாயுடு தலையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதே போல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கோவில்களுக்கான தரிசன டிக்கெட், தங்கும் அறைகள், நன்கொடைகள் ஆகியவற்றையும் வாட்ஸ்ஆப் மெசேஜ் மூலம் முன்பதிவு செய்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.




மத்திய அரசுடன் இணைந்து ரயில் டிக்கெட்களையும் வாட்ஸ்ஆப் மூலம் பெற்றுக் கொள்ளும் சேவையையும் வழங்க ஆந்திர அரசு மத்திய அரசுடன் பேசி வருகிறது. இது தவிர பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட் போன்ற சேவைகளையும் இதன் வழியாக பெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மற்றும் திருப்பதி தரிசன டிக்கெட்டை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால், அதை தடுப்பதற்கான முன் ஏற்பாடுகளை செய்து கொண்ட பிறகு, அனைத்து துறைகளின் சேவைகளையும் பாதுகாப்பான முறையில் வழங்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.


அதாவது க்யூஆர் கோட் மற்றும் ஆதார் மூலம் சரிபார்த்த பிறகு பாதுகாப்பான முறையில் இதை அமல்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. பொது மக்கள் எளிமையாக ஆந்திர அரசின் சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதேசமயம், வாட்ஸ்ஆப் மூலம் ஆந்திர அரசின் சேவைகளையும், திருப்பதி டிக்கெட்களையும் முன்பதிவு செய்யும் முறையை ஆந்திர அரசு இதுவரை அமல்படுத்தவில்லை. இதை அமல்படுத்துவது குறித்த பூர்வாங்க ஆலோசனைகள் மட்டுமே நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இன்னும் இது அமலுக்கு வரவில்லை.


இதற்கிடையில் ஆந்திர அரசின் இந்த புதிய திட்டத்தை பயன்படுத்தி, இணையதளத்தில் வாட்ஸ்ஆப் நம்பர் ஒன்றும், அந்த எண்ணிற்கு Hi என மெசேஜ் அனுப்பி, அதில் கேட்படும் விபரங்களை அளித்து, பணம் செலுத்தினால் திருப்பதி தரிசன டிக்கெட் வாட்ஸ்ஆப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில் சிலர் டிக்கெட் புக் செய்து வருகிறார்கள். ஆனால் இரண்டில் எது உண்மை என இதுவரை ஆந்திர அரசு மற்றும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.


இப்போதைய நிலையில் இன்னும் இந்த வாட்ஸ் ஆப் டிக்கெட் முன்பதிவு அமலுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!

news

தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

news

அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!

news

ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்