சென்னை: வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தாலும் போரடிக்குது.. ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்யும்போதும் போரடிக்குது.. எங்கேயாச்சும் வெளில போய்ட்டு வரலாம்னு பார்த்தாலும் வேலை டை்டடா இருக்கு.. ஆனால் ஒரே ஒரு நாள் வேணும்னா ஒதுக்கலாம்ப்பா.. பட், ஒரு நாள்ல எங்க போக முடியும் .. அப்படின்னு நினைக்கிற ஆளா நீங்க.. இருக்கவே இருக்குங்க சூப்பரான ஒரு நாள் டூர்... எங்க தெரியுமா.. நம்ம புதுச்சேரிக்குத்தான்.
சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் விதம் விதமான டூர் பேக்கேஜை வைத்துள்ளது தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம். ஆன்மீக சுற்றுலா முதல் பல்வேறு வகையான பேக்கேஜ் டிடிடிசியிடம் உள்ளது. எல்லாமே பட்ஜெட் ரேட்தான். போகும் செலவு, சாப்பாட்டுச் செலவு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய சூப்பர் டூர் பேக்கேஜ்கள் இதில் உள்ளன.
அதில் புதுச்சேரி டூரை மட்டும் உருவி உங்கள் முன்பு இப்போது வைக்கிறோம். உங்களுக்கு செட் ஆச்சுன்னா, டைம் கிடைக்கும்போது ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துட்டு வாங்க.

எந்தெந்த இடமெல்லாம் கூட்டிப் போவாங்க?:
சென்னையிலிருந்து கிளம்பி புதுச்சேரிக்கு முதலில் சுற்றுப்பயணம் சென்றடையும். அங்கிருந்து ஆரோவில், புதுச்சேரி மியூசியம், புதுச்சேரி பீச், அரவிந்தர் ஆசிரமம், முதலியால் குப்பம் படகுக்குழாம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். மொத்தம் 9 இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுவார்கள்.
கிளம்பும் நேரம்:
காலை 6.30 மணிக்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக வளாகத்திலிருந்து பஸ் கிளம்பும். 8 மணிக்கு மாமல்லபுரத்தில் காலை உணவு. அதன் பிறகு 10.15 மணிக்கு ஆரோவில் சென்றடையும். அங்கிருந்து 12.15 மணிக்கு புதுச்சேரி மியூசியம். அதை முடித்த பின்னர் 12.50 மணிக்கு பீச். 1.30 மணிக்கு லன்ச் வழங்கப்படும். 2 மணிக்கு அரவிந்தர் ஆசிரமம். 3.30 மணிக்கு முதலியார் குப்பம் படகுக் குழாம். இரவு 7 மணிக்கு சென்னைக்கு வந்தடைவீர்கள்.
டூர் நாட்கள்:
அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்.
பஸ் வசதி:
வால்வோ ஏசி, நான் ஏசி மற்றும் சாதாரண ஏசி வகுப்பு என 3 வகையான பஸ்கள் உள்ளன. உங்களுக்குத் தேவையான பஸ்ஸை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
கட்டணம் எவ்வளவு?:
சென்னை டூ புதுச்சேரிக்கு ஒரே நாளில் போய் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு வருவதற்கு ஒருவருக்கு ரூ. 1850 முதல் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். என்ன போய்ப் பார்த்துட்டு வரலாமா.. விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொண்டு புக் செய்து கொள்ளலாம்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}