பெண் பயணியின் கையைப் பிடித்து இழுத்த டிடிஆர்.. உடனடி கைது!

May 10, 2023,12:25 PM IST
கோட்டயம்: கேரளாவில் ஒடும் ரயிலில் பெண் பயணியின் கையைப் பிடித்து இழுத்து அநாகரீகமாக நடந்து கொண் டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

நிலம்பூர் - கொச்சுவேலி இடையிலான ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  செவ்வாய்க்கிழமை காலை நிலம்பூர் -கொச்சுவேலி இடையிலான ராஜ்ஜிய ராணி ரயில் அலுவா ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் பயணிக்கு ஆர்ஏசியில் இடம் கிடைத்திருந்தது. அவரும் எஸ் 4 பெட்டியில் அதற்கான இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவரது இருக்கைக்கு அருகே காலியாக இருந்த இருக்கையில் அந்த ரயிலின் டிக்கெட் பரிசோதகர் வந்து அமர்ந்துள்ளார். மேலும் அப்பெண்ணின் கையையும் இறுகப் பற்றியுள்ளார். இதைப் பார்த்த அந்தப் பெண் பதறிப் போய் கையை உதறியுள்ளார். ஆனால் டிடிஆர் விடவில்லை. மீண்டும் கையைப் பிடித்துள்ளார்.



இதையடுத்து தனது செல்போன் மூலம் அந்தப் பெண் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு  அறைக்கு போன் செய்தார். அவர்கள் ரயிலில் இருந்த ஆர்பிஎப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு விரைந்து வந்தனர்.

சம்பந்தப்பட்ட டிடிஆரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் டிடிஆர் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஐர்படுத்தி 14 நாள் சிறைக் காவலில் அவர் அடைக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்