பெண் பயணியின் கையைப் பிடித்து இழுத்த டிடிஆர்.. உடனடி கைது!

May 10, 2023,12:25 PM IST
கோட்டயம்: கேரளாவில் ஒடும் ரயிலில் பெண் பயணியின் கையைப் பிடித்து இழுத்து அநாகரீகமாக நடந்து கொண் டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

நிலம்பூர் - கொச்சுவேலி இடையிலான ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  செவ்வாய்க்கிழமை காலை நிலம்பூர் -கொச்சுவேலி இடையிலான ராஜ்ஜிய ராணி ரயில் அலுவா ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் பயணிக்கு ஆர்ஏசியில் இடம் கிடைத்திருந்தது. அவரும் எஸ் 4 பெட்டியில் அதற்கான இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவரது இருக்கைக்கு அருகே காலியாக இருந்த இருக்கையில் அந்த ரயிலின் டிக்கெட் பரிசோதகர் வந்து அமர்ந்துள்ளார். மேலும் அப்பெண்ணின் கையையும் இறுகப் பற்றியுள்ளார். இதைப் பார்த்த அந்தப் பெண் பதறிப் போய் கையை உதறியுள்ளார். ஆனால் டிடிஆர் விடவில்லை. மீண்டும் கையைப் பிடித்துள்ளார்.



இதையடுத்து தனது செல்போன் மூலம் அந்தப் பெண் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு  அறைக்கு போன் செய்தார். அவர்கள் ரயிலில் இருந்த ஆர்பிஎப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு விரைந்து வந்தனர்.

சம்பந்தப்பட்ட டிடிஆரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் டிடிஆர் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஐர்படுத்தி 14 நாள் சிறைக் காவலில் அவர் அடைக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்