தூத்துக்குடி: அதீத கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தண்ணீர் சூழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது. மக்கள் வீடுகளையும், தங்களின் உடைமைகளையும் இழந்து தவித்தனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. என்ன செய்வது என்று அறியாமல் மக்கள் இருக்கும் வேளையில், பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிக்கரம் நீட்டி மக்களை துயரத்தில் இருந்து மீட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சென்று தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆட்சியர்கள், அரசுத்துறை அதிகாரிகளுடன் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு புகைப்படங்களையும் பார்வையிட்டார். வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் மத்திய நிதி அமைச்சருக்கு புகைப்படங்கள் குறித்த விளக்கங்களை அளித்தார். பின்னர் தூத்துக்குடியில் அதிகம் பாதிக்கப்பட்ட கோரப்பள்ளம், குறிஞ்சி நகர் போன்ற பகுதிகளிலும் நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
கடவுளால் அழகாக வடிவமைக்கப்பட்டவர்கள்.. WOMEN EMPOWERMENT
அப்பாவுக்குப் பிறந்த நாள்.. Happy Birthday to my dear Dad!
கூட்டை உடைத்து வெளியே வந்த சுதந்திரப் பெண்கள்.. Women broke the shell
சிபிஐ சம்மன்...மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
"ம்ம்... என்னச் சொல்லப் போறானோ? மதன்".. அவளின் (ல்) அவன் (5)
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
{{comments.comment}}