தூத்துக்குடி: அதீத கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தண்ணீர் சூழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது. மக்கள் வீடுகளையும், தங்களின் உடைமைகளையும் இழந்து தவித்தனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. என்ன செய்வது என்று அறியாமல் மக்கள் இருக்கும் வேளையில், பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிக்கரம் நீட்டி மக்களை துயரத்தில் இருந்து மீட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சென்று தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆட்சியர்கள், அரசுத்துறை அதிகாரிகளுடன் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு புகைப்படங்களையும் பார்வையிட்டார். வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் மத்திய நிதி அமைச்சருக்கு புகைப்படங்கள் குறித்த விளக்கங்களை அளித்தார். பின்னர் தூத்துக்குடியில் அதிகம் பாதிக்கப்பட்ட கோரப்பள்ளம், குறிஞ்சி நகர் போன்ற பகுதிகளிலும் நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}