சென்னை: தமிழக வெற்றிக் கழத்தின் முதலாம் ஆண்டு விழா பிப்., 26ம் தேதி நடைபெறும் என்றும், இதில் கலந்து கொள்ள 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்படும் என்றும் தவெக தெரிவித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடிகர் விஜய் ஆரம்பித்த கட்சி தான் தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆரம்பித்ததில் இருந்து கட்சி பணிகளை ஒவ்வொன்றாக விஜய் செய்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் விஜய் கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்றும் விஜய் அறிவித்தார்.

2026ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கட்சியினரை மட்டுமல்லாமல், பொதுமக்களையும் விஜய் சந்திக்க உள்ளார். சமீபத்தில், பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக பரந்தூர் மக்களை விஜய் நேரடியாக சந்தித்து பேசியது தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் அக்கட்சியின் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, கட்சி முதலாம் ஆண்டு விழா பிப்ரவரி 26ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழா சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு கூட்டம் அதிகம் கூடும் என்பதால், முக்கிய நிர்வாகிகளுக்கு பாஸ் வழங்கப்பட உள்ளது. இந்த பாஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ள நிலையில், 2000 பேருக்கு மட்டும் பாஸ் வழங்க கட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}