சென்னை: எந்த கட்சியிலும் இல்லாத அளவிற்கு தவெகவில் சிறார் அணி, இளம் பெண்கள் அணி, பெண்கள் அணி, திருநங்கைகள் அணி உட்பட 28 அணிகளை உருவாக்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கட்சி தொடங்கிய விஜய் 2025 பிப்ரவரி 2ம் தேதி முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடினார். இதற்காக அக்கட்சி நிர்வாகிகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அதே சமயத்தில் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டு, சிலைகளையும் தவெக தலைவர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதி திறந்து வைத்தார்.

தற்போது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி கட்சிப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். கட்சி தொடங்கி ஒராண்டு ஆகியுள்ள நிலையில், சமீபத்தில் தான் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து அறிவித்துள்ளார். முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியான அறையில் ஆலோசனை நடத்தி, கட்சி நிா்வாகிகள், தொண்டா்களை நம்பித்தான் தவெகவை தொடங்கியுள்ளதாகவும், கட்சி வளா்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், நிர்வாக வசதிக்காக சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அண்மையில் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில், எந்த கட்சியிலும் இல்லாத வகையில், பெண்கள் அணி, இளம்பெண்கள் அணி, சிறார்கள் அணிகளை உருவாக்கியுள்ளார் தவெக தலைவர் விஜய். இவை தவிர தவெகவில் 3ம் பாலினத்தவர் மாற்றுத்திறனாளிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணிகளும் உள்ளன. ஆக மொத்தத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தம் 28 அணிகளை விஜய் உருவாக்கியுள்ளார். அதில், ஒன்பது அணிகள் குறித்த விபரத்தை வெளியிட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட 9 அணிகளுக்கும் விரைவில் நிர்வாகிகளும் நியமிக்கப்பட உள்ளனர்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}