சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த வான் சகச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று பிரமாண்ட வான் சாகச கண்காட்சி நடைபெற்றது. இதற்காக கடந்த சில நாட்களாக விமானப்படையின் பல்வேறு வகையான ஏற்பாடுகளை செய்து வந்தனர். தமிழக அரசு சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விமான சாகச கண்காட்சியின் போது வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக 240த்திற்கும் மேற்பட்டவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 93 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்ததற்கு பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் இந்திய விமானப்படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனை அளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்பட செயல்படுத்துவதில், இனிவரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்
{{comments.comment}}