மதுரை: தவெக மாநாட்டிற்கு பல பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்து வருவதால், மதுரை பாரபத்தி மக்கள் வெள்ளத்தில் நிறம்பியுள்ளது. இதன் காரணமாக மாநாட்டு திடலுக்கு விஜய் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மிக பிரம்மாண்ட அளவில் இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள மாநாட்டிற்காக தற்போதே மாநாட்டு திடல் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. மதுரை பாரபத்தியில் தவெக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் எலியார்பத்தியில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதி தற்போதே நிரம்பியது.
இன்னும் பல்வேறு வாகனங்களில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அணி அணியாக திரண்டு வந்துகொண்டுள்ளனர். லட்சக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளதால் மதுரை பாரபத்தி பகுதியே ஸ்தம்பித்தது. அப்பகுதியில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. மாநாட்டிற்கு வருபவர்களுக்காக அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதால் உள்ளே நிறுத்தப்பட்டுள்ள லாரிகளுக்கு அடியிலும், ஒலிபெருக்கி, தண்ணீர் தொட்டி, மின்விளக்குகளுக்கு அடியிலும் தொண்டர்கள் ஒதுங்கி வருகின்றனர். இதனையடுத்து, தவெக மாநாடு பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், ராட்சத டிரோன் மூலமாக மாநாடு திடல் முழுவதும் தண்ணீர் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆங்காங்க உணவுகள் சமைக்கப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை தவெக மாநாட்டுத் திடலில், அவரச மருத்துவ உதவிக்காக ட்ரோன்களில் முதலுதவி பெட்டிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
மதுரை பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநாட்டில் சுமார் 45 நிமிடங்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பின் விஜய்யின் பேச்சு தொடங்கும் என்றும் இன்றைய மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இரவு 7 மணிக்குள் மாநாட்டை முடித்து தொண்டர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}