மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது மதுரை பாரபத்தி...மாநாட்டு திடலுக்கு முன்கூட்டியே வருகிறார் விஜய்

Aug 21, 2025,12:42 PM IST

மதுரை: தவெக மாநாட்டிற்கு பல பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்து வருவதால், மதுரை பாரபத்தி மக்கள் வெள்ளத்தில் நிறம்பியுள்ளது. இதன் காரணமாக மாநாட்டு திடலுக்கு விஜய் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மிக பிரம்மாண்ட அளவில் இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள மாநாட்டிற்காக தற்போதே மாநாட்டு திடல் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. மதுரை பாரபத்தியில் தவெக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் எலியார்பத்தியில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதி தற்போதே நிரம்பியது.


இன்னும் பல்வேறு வாகனங்களில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அணி அணியாக திரண்டு வந்துகொண்டுள்ளனர். லட்சக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளதால் மதுரை பாரபத்தி பகுதியே ஸ்தம்பித்தது. அப்பகுதியில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. மாநாட்டிற்கு வருபவர்களுக்காக அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


 


கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதால் உள்ளே நிறுத்தப்பட்டுள்ள லாரிகளுக்கு அடியிலும், ஒலிபெருக்கி, தண்ணீர் தொட்டி, மின்விளக்குகளுக்கு அடியிலும் தொண்டர்கள் ஒதுங்கி வருகின்றனர். இதனையடுத்து, தவெக மாநாடு பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், ராட்சத டிரோன் மூலமாக மாநாடு திடல் முழுவதும் தண்ணீர் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆங்காங்க உணவுகள் சமைக்கப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை தவெக மாநாட்டுத் திடலில், அவரச மருத்துவ உதவிக்காக  ட்ரோன்களில் முதலுதவி பெட்டிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.


மதுரை பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநாட்டில் சுமார் 45 நிமிடங்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பின் விஜய்யின் பேச்சு தொடங்கும் என்றும் இன்றைய மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இரவு 7 மணிக்குள் மாநாட்டை முடித்து தொண்டர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்