விஜய்யின் தவெகவும் இடைத் தேர்தலில் போட்டியிடலை.. ஈரோடு கிழக்கில் இரு முனைப் போட்டி உறுதி!

Jan 17, 2025,05:40 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என  அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம் எல் ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் அத்தொகுதி  காலியானது. தொடர்ந்து பிப்ரவரி 5ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 10-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டு, இன்றுடன் வேப்பமனு தாக்கல் நிறைவடைகிறது. 




பொங்கல் விடுமுறை முடிந்து இன்று கடைசி நாள் என்பதால் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.அதேபோல் தமிழர் கட்சி சார்பில் எம்.கே.சீதாலட்சுமி போட்டியிடுகிறார். பாஜக, அதிமுக, தேமுதிக, ஆகிய முக்கிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டது.


இந்த நிலையில் தமிழக வெற்றிக்  கழகமும் நடந்து முடிந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை போலவே பிப்ரவரி ஐந்தாம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழக வெற்றிக்கழக தலைவர் அவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வெளியிட்ட கட்சி தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித்  தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.


 மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளை பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொது தேர்தல்களை காட்டிலும் ஜனநாயகத்திற்கு எதிராக பல மடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாற்று நமக்கு உணர்த்துகிறது.


அதன் அடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதை கழகத் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்