விரைவில் சந்திப்போம் நண்பர்களே.. 12,10ல் சாதித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஹேப்பி நியூஸ்!

May 10, 2024,05:22 PM IST

சென்னை: பத்து மற்றும் பன்னிரண்டாம் பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, விரைவில் அவர்களை சந்திக்க உள்ளதாக தமிழக  வெற்றிக்கழக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.


கடந்த மார்ச் 26 ஆம் நாள் தேதி நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட் இன்று வெளியானது. இந்த பொது தேர்வில் 8,18,743 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தை தொடர்ந்து இன்று புதுச்சேரியிலும் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மே மாதம் 6ஆம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது. இதில்  94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதிலும் மாணவர்களை மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட, இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 


இதற்கு தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.




இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான நடிகர் விஜய் கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல் இந்த ஆண்டும் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக பதிவிட்டுள்ளார்.


இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வில் பல்வேறு துறைகளில் வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூதாயத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறி விரைவில் சந்திப்போம் என கூறியுள்ளார்.


மேலும் வெற்றி பெற்ற மாணவர்களையும் ஜூன் மாதத்தில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை மாணவ மாணவியரை விஜய் சந்தித்த நிகழ்வு நீண்ட நாட்கள் பேசப்பட்டது. அப்போது அவர் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் இப்போது அரசியல் தலைவராகவும் அவர் மாறியுள்ள நிலையில் நடைபெறப்போகும் இந்த சந்திப்பு மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

டிசம்பராக மாறும் மே.. நாளை மறுநாள்.. வங்க கடலில்.. புதிய "லோ" உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்

news

போதை பொருள் பயன்பாடு... விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுங்க.. வீரலட்சுமி சொல்கிறார்!

news

சென்னை ஐடி பெண்ணின் விபரீத முடிவு.. சமூக வலைதள டிரோல்கள்தான் காரணமா?

news

கிளியோ மயிலோ.. அனுமதி இல்லாமல் வளர்த்தால்.. ரூ. 10,000 அபராதம்.. அதுக்கும் லைசன்ஸ் வாங்கணும்!

news

ஓய்வு பெறுவது குறித்து.. இன்னும் முடிவெடுக்கவில்லை தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

news

பாஜகவுக்கு 8 முறை ஓட்டு போட்டு அதிர வைத்த உ.பி. சிறுவன்.. புகாருக்குப் பிறகு கைது!

news

அடுத்த 5 ஆண்டுக்கு அல்ல.. 1000 வருடத்துக்கு திட்டம் தீட்டுகிறோம்.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

news

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மரணமடைந்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

அறுதப் பழசான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி.. அதிர வைக்கும் தகவல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்