தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

Jan 18, 2026,01:41 PM IST

சென்னை: சிபிஐ விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராக வேண்டியுள்ளதால், இன்று இரவே தவெக தலைவர் விஜய் டெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.


கடந்த 2025 செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற விஜய் கலந்து கொண்ட, தவெக கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே  ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விஜய் ஆஜராகி சுமார் 6 மணி நேரம் விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து மறுநாளே (ஜனவரி 13) மீண்டும் ஆஜராக சிபிஐ அறிவுறுத்தியது. ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் கால அவகாசம் கோரியிருந்தார். இதை ஏற்று ஜனவரி 19ம் தேதி மீண்டும் ஆஜராக சிபிஐ அறிவுறுத்தியது.




அதன்படி இரண்டாவது முறையாக சிபிஐ முன் நாளை ஆஜராகவுள்ளார் விஜய். முதல் விசாரணையின்போது விஜய்யிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. நாளையும் விஜய்யிடம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த முறை நடந்த விசாரணையின்போது தமிழ்நாடு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். நாளைய விசாரணையின்போது இதேபோல வேறு யாரேனும் விசாரணைக்கு வருவார்களா என்று தெரியவில்லை.


விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத் தணிக்கை தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது 21ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நாளை சிபிஐ விசாரணைக்காக மீண்டும் ஆஜராகிறார் விஜய். இதற்காக இன்று இரவே அவர் டெல்லி புறப்பட்டுப் போவதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

ஆசிரியர் ஓர் அகல்விளக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்