சென்னை: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்பது அழைப்பிதழில் இருந்து தெரியவந்துள்ளது.
டிசம்பர் 6ம் தேதி ஆதவ் அர்ஜூனா எழுதிய அம்பேத்கர் குறித்த புத்தகத்தை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிடுகிறார் என்றும், அந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யும் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன்னர் தீயாக பரவி வந்தது. ஒரே மேடையில் விஜய் மற்றும் திருமாவளவனும் பங்கேற்க உள்ளதால், இருவரும் வருகின்ற 2026ம் தேர்தலில் கூட்டணி வைப்பதற்கான அச்சாரம் தான் இந்த புத்தக வெளியீட்டு விழா என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த செய்திக்கு திருமாவளவன் பல முறை மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம் என்றும் உறுதியாக தெரிவித்தார்.புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த விழாவில் கலந்து கொள்ள வில்லை என்பது இந்த விழாவின் அழைப்பிதலில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆதவ் அர்ஜூனா தொகுத்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்பு உரையாற்ற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விகடன் பிரசுரம் வெளியிடும் இந்த புத்தகம் டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. மேலும் இந்த விழாவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் உள்ளிட்ட சிலர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}