கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு சென்ற தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், அங்கு கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்து 38 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.
இந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யும் இன்று கள்ளக்குறிச்சிக்கு விரைந்து வந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார். டாக்டர்களிடமும் அவர்களது நிலை குறித்துக் கேட்டறிந்தார். குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். விஜய்யைப் பார்த்து கதறி அழுத பெண்ணை கட்டி அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அரசின் நிர்வாக கவனக்குறைவே இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று அவர் கண்டித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}