ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!

Jan 21, 2026,12:43 PM IST

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்த ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதி உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைகிறார். இதேபோல அதிமுகவைச் சேர்ந்த வெல்லமண்டி நடராஜனும் இன்று திமுகவுக்கு வருகிறார்.


அதிமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்து ஓ.பி.எஸ். தலைமையில் புதிய அணி உருவானபோது அதில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியிலிருந்து அவர் விலகுகிறார். 




சமீபத்தில்தான், ஓபிஎஸ் அணியில் இருந்த மற்றொரு தீவிர ஆதரவாளரான எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் சமீபத்தில் திமுகவுக்கு வந்து சேர்ந்தார். தனது சேரன்மாதேவி எம்எல்ஏ  பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இந்த வரிசையில் தற்போது வைத்திலிங்கமும் இணைந்துள்ளார்.


ஓபிஎஸ் அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதிமுகவில் மீண்டும் இணையும் வாய்ப்பும் இல்லா்மல் போய் விட்டது. இதனால்தான் அவரது அணியிலிருந்து ஓவ்வொருவராக உதிர்ந்து வருகிறார்கள் என்று கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்