ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!

Jan 21, 2026,12:43 PM IST

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்த ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதி உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைகிறார். இதேபோல அதிமுகவைச் சேர்ந்த வெல்லமண்டி நடராஜனும் இன்று திமுகவுக்கு வருகிறார்.


அதிமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்து ஓ.பி.எஸ். தலைமையில் புதிய அணி உருவானபோது அதில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியிலிருந்து அவர் விலகுகிறார். 




சமீபத்தில்தான், ஓபிஎஸ் அணியில் இருந்த மற்றொரு தீவிர ஆதரவாளரான எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் சமீபத்தில் திமுகவுக்கு வந்து சேர்ந்தார். தனது சேரன்மாதேவி எம்எல்ஏ  பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இந்த வரிசையில் தற்போது வைத்திலிங்கமும் இணைந்துள்ளார்.


ஓபிஎஸ் அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதிமுகவில் மீண்டும் இணையும் வாய்ப்பும் இல்லா்மல் போய் விட்டது. இதனால்தான் அவரது அணியிலிருந்து ஓவ்வொருவராக உதிர்ந்து வருகிறார்கள் என்று கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்