லோக்சபாவுக்குள் குதித்த 2 இளைஞர்கள்.. கலர் புகையை வீசியதால் பெரும் பரபரப்பு.. எம்.பிக்கள் பீதி!

Dec 13, 2023,06:12 PM IST

டெல்லி: நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 22வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து 2 இளைஞர்கள் வண்ணப் புகையை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நாடாளுமன்ற வளாகம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதன் 22வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இன்று காலை தாக்குதலில் உயிர் நீத்த 9 பேரின் படங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம் போல கூடின. லோக்சபாவை துணை சபாநாயகர் ராஜேந்திர அகர்வால் நடத்தி வந்தார். அப்போது லோக்சபா பார்வையாளர் மாடத்திலிருந்து 2 இளைஞர்கள் உள்ளே குதித்தனர். அடுத்தடுத்து உள்ளே குதித்த இருவரும் காலில் மறைத்து வைத்திருந்த கலர் பொடியை எடுத்து வீசினர். அது மஞ்சள் நிறத்தில் புகை கிளம்பியது. கிட்டத்தட்ட கண்ணீர்ப் புகை போல அது இருந்தது.




இருவரில் ஒருவரை உடனே மடக்கிப் பிடித்தனர். இன்னொரு நபர் சபாநாயகர் இருக்கையை நோக்கி அங்குமிங்கும் ஓடினார். அவர்களின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சபை மார்ஷல்கள் உள்ளே விரைந்து வந்து அந்த நபர்களை போராடி மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தால் லோக்சபா அப்படியே  ஸ்தம்பித்துப் போனது. பல எம்.பிக்கள் வேகம் வேகமாக வெளியேறினர். அனைவரும் பீதியடைந்து விட்டனர்.  இதேபோல நாடாளுமன்றத்திற்கு வெளியே கோஷமிட்டபடி போராட்டத்தில் குதித்த ஒரு பெண்ணையும் பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர். இந்த 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.


நாடாளுமன்றத்திற்குள் நடந்த இந்த சம்பவம் மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்