சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் முரளிதரன் ஆகிய இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவர் பிறந்த செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல மாநில அளவிலும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த விருதுக்காக இந்திய முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் செப்டம்பர் 5ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்க உள்ளார். இந்த விருதுக்கு தேர்வானவர்களுக்கு வெள்ளி பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன் ரூ.50,000த்திற்கான காசோலையும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுவார்கள்.
விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் தனது எக்ஸ் தள பக்கத்திலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், வேலூர் மாவட்டம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கோபிநாத் அவர்களும், மதுரை டி.வி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன் அவர்களும் தேசிய நல்லாசிரியர் விருது பெறுகின்றார்கள்.
இவ்விரு ஆசிரியப் பெருமக்களுக்கும் tnschoolsedu சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
மனத்தின் மடை திறந்ததே!
Trust is based on the actions .. செயல்களில்தானே எல்லாமே!
Tireless Days .. சத்தமில்லாமல் வரும் விடியல் எனும் தோழன்!
Right people will stay to figure it out with you
சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
{{comments.comment}}