நல்லாசிரியர் விருது 2024: தமிழ்நாடு ஆசிரியர்கள் 2 பேர் தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து!

Aug 28, 2024,01:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் முரளிதரன் ஆகிய இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவர் பிறந்த செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல மாநில அளவிலும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.




இந்த விருதுக்காக இந்திய முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் செப்டம்பர் 5ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்க உள்ளார். இந்த விருதுக்கு தேர்வானவர்களுக்கு வெள்ளி பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன் ரூ.50,000த்திற்கான காசோலையும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுவார்கள்.


விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் தனது எக்ஸ் தள பக்கத்திலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், வேலூர் மாவட்டம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கோபிநாத் அவர்களும், மதுரை டி.வி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன் அவர்களும் தேசிய நல்லாசிரியர் விருது பெறுகின்றார்கள்.


இவ்விரு ஆசிரியப் பெருமக்களுக்கும் tnschoolsedu சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்