வேலூர்: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, நான் சினிமா நியூஸ் பார்ப்பதில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்று அறிவித்தார். இது விவாதப் பொருளாக மாறியது.
இப்படி பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. விஜ்ய கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். விழாவில் விஜய் பேசுகையில், திமுகவை நேரடியாகவேத் தாக்கிப் பேசினார். மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026 தேர்தலில் மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என பேசியிருந்தார்.
ஏற்கனவே தவெக கட்சியின் மாநில மாநாட்டில் விஜய் திமுக குறித்த பேசிய பேச்சுக்கள் தற்போது வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் எழுந்து வரும் நிலையில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் நேற்று விஜய் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பேச்சுக்களுக்கு தற்போது திமுக அமைச்சர்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் தெரிவித்து பதில் அளித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்பாடியில் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், பிறப்பால் யாரும் முதல்வராக கூடாது என்று விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து கேட்டபோது, மக்களால் தேர்வு செய்யப்பட்டு தான் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. யாருங்க பிறப்பால் முதல்வர்..? மக்களால் தேர்வு செய்ததால்தான் முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் என்றார்.
தொடர்ந்து விஜய் குறித்த இன்னொரு கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபோது, நான் சினிமா நியூஸ் பார்ப்பதில்லை என ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டு சென்றார் உதயநிதி ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}