கெஜ்ரிவால் கைது: ஜநா பொதுச்செயலாளர் கவலை.. இதெல்லாம் தேவையில்லாதது.. இந்தியா சாடல்!

Mar 29, 2024,04:48 PM IST

வாஷிங்டன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது , காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்க விவகாரங்கள் தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தேவையில்லாதது என்று இந்தியா வர்ணித்துள்ளது.


மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 22ம் தேதி கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1ம் தேதி வரை அவருக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் கைதுக்கு பல்வேறு தலைவர்கள் பல்வேறு மாநில முதல்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கெஜ்ரிவால் குடும்பத்தினருக்கு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார். முன்னதாக அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் சார்பில் கெஜ்ரிவால்  குடும்பத்தினருக்கு சட்ட உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.




இந்நிலையில், கெஜ்ரிவால் கைதுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஜநா பொதுச்செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளரும் கருத்து தெரிவித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைது மற்றும் காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஐநா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், இந்தியாவிலும் அல்லது தேர்தல் நடைபெறும் எந்த நாட்டிலும், மக்களின் அரசியல் மற்றும் சிவில்  உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க முடியும் என்ற சூழல் இருப்பதாக ஜநா நம்புகிறது என்று தெரிவித்துள்ளார்.


இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் ஜார்ஜ் கூறுகையில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர். குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானம் அவருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.


அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் பிச்சாரம் செய்வதை சவாலாக மாற்றும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளையும் நாங்கள் அறிவோம். இந்தச் சிக்கல்கள் அனைத்திற்கும் நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.


இந்தக் கருத்துகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மையில் தலையிடும் வகையில் இந்தக் கருத்துக்கள் உள்ளன. இவை தேவையில்லாதவை என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்