அடி ஆத்தாடி.. மனதைக் கொள்ளை கொண்ட ஜெனீபர் டீச்சர் .. A rewind!

Jan 16, 2026,12:39 PM IST

-கவிஞர் க.முருகேஸ்வரி


பாரதிராஜா.......


தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்.... காதல் திரைப்படங்களை காவியமாக்கிக் கொடுப்பவர். அப்படி ஒரு திரைப்படம் தான் கடலோரக் கவிதைகள்.


இந்தத் திரைப்படத்தைப் பார்த்து ஜெனிபர் டீச்சராகவே தன்னை நினைத்துக் கொள்ளாத பெண்களும் உண்டா?


அதிலும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் சொல்லவே வேண்டாம்......(ரேகாவாகவே மாறி குடையைச் சுழற்றியது..,... காட்டன் புடவையில் கலக்கியது.......)


அதில் வரும் ஒரு காட்சி... எனக்கு மிகவும் பிடித்த காட்சி..... உங்களுடன்  மீண்டும் எழுத்துக்களால் அந்த நினைவுகளை மீட்டெடுக்கிறேன்.....




தாஸ், அவள் வீட்டில் கையில் ஆட்டுக்குட்டியுடன் இருக்கும் இயேசு வின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பான்.


ஜெனிபர் டீச்சர், என்ன தாஸ் அப்படி பார்க்குறீஙகனு கேட்பாள். ஏன் டீச்சர் அவருக்கு நம்மள மாதிரி படிப்பு வராதா??? ஆடு மேய்க்கிறார் என்று கேட்பான் தாஸ். அதற்கு ஜெனி... அது வழி தவறிய ஆடு ...அதற்கு அடைக்கலம் கொடுக்கிறார். அவருக்கு Good shepherd என்ற பெயரும் உண்டு என்பாள்.


அப்படியென்றால் என்ன என்று கேட்கும் தாஸிடம்... நல்ல மேய்ப்பாளர் என்று கூறுவாள். அப்ப நான் சொன்னது சரிதான் என்று தாஸ் சொல்ல..... ஜெனி, தாஸிடம்....ஏன் தாஸ் உன்கிட்ட ஒரு ஆடு வழி தவறி வந்தா என்ன செய்வ? என்று கேட்பாள்.


அதற்கு தாஸ், பிரியாணி தான்.....பட்ட கிராம்பு எல்லாம் போட்டு அசத்திட மாட்டேன் என்பான். அதற்கு ஜெனி..... அது ஜெனியா இருந்தா????? அந்த ஆடு நானா இருந்தா???? என கேட்பாள்....


அப்புறம் என்ன.. தாஸ் அவளைப் பார்க்க.. ஜெனி தாஸைப் பார்க்க.. அடி ஆத்தாடி என்ற பாடல் ஒலிக்க


அருமையான காட்சி.. நான் ரசித்த காட்சி!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி 

திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்