டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான இணையதளத்தை இன்று தொடங்கி வைத்தார் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் தனித் தனியாக சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, சொத்துக்கள் உள்ளிட்டவை குறித்து இந்த சட்டங்கள் வேறு வேறு விதிகளை வகுத்து வைத்துள்ளன. இதை மாற்றி அனைத்து மதத்தவர்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை உருவாக்குவதே மத்திய அரசின் திட்டமாகும். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். இதனை அடுத்து கடந்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தற்போது சட்டமாகி, உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த பொது சிவில் சட்டத்தின் படி, பழங்குடியினத்தவரை தவிர அனைத்து மதம் மற்றும் ஜாதியைச் சேர்ந்த மக்களுக்கும் திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை, வாரிசுரிமை உள்ளிட்டவை ஒரே மாதிரியாக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதையும் பதிவு செய்ய வேண்டும் என்று இச்சட்டத்தின் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் உள்ள விதிகள் உள்ளிட்டவை குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய இணையதளத்தையும் முதல்வர் தாமி தொடங்கி வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}