டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான இணையதளத்தை இன்று தொடங்கி வைத்தார் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் தனித் தனியாக சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, சொத்துக்கள் உள்ளிட்டவை குறித்து இந்த சட்டங்கள் வேறு வேறு விதிகளை வகுத்து வைத்துள்ளன. இதை மாற்றி அனைத்து மதத்தவர்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை உருவாக்குவதே மத்திய அரசின் திட்டமாகும். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். இதனை அடுத்து கடந்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தற்போது சட்டமாகி, உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த பொது சிவில் சட்டத்தின் படி, பழங்குடியினத்தவரை தவிர அனைத்து மதம் மற்றும் ஜாதியைச் சேர்ந்த மக்களுக்கும் திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை, வாரிசுரிமை உள்ளிட்டவை ஒரே மாதிரியாக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதையும் பதிவு செய்ய வேண்டும் என்று இச்சட்டத்தின் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் உள்ள விதிகள் உள்ளிட்டவை குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய இணையதளத்தையும் முதல்வர் தாமி தொடங்கி வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
{{comments.comment}}