உத்தரகாண்ட் மாநிலத்தில்.. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது.. இன்று முதல்!

Jan 27, 2025,07:02 PM IST

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான இணையதளத்தை இன்று தொடங்கி வைத்தார் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி. 


இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் தனித் தனியாக சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, சொத்துக்கள் உள்ளிட்டவை குறித்து இந்த சட்டங்கள் வேறு வேறு விதிகளை வகுத்து வைத்துள்ளன. இதை மாற்றி அனைத்து மதத்தவர்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை உருவாக்குவதே மத்திய அரசின் திட்டமாகும். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.




கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். இதனை அடுத்து கடந்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா  நிறைவேற்றப்பட்டது. 


இந்த மசோதா தற்போது சட்டமாகி, உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த பொது சிவில் சட்டத்தின் படி, பழங்குடியினத்தவரை தவிர அனைத்து மதம் மற்றும் ஜாதியைச் சேர்ந்த மக்களுக்கும் திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை, வாரிசுரிமை உள்ளிட்டவை ஒரே மாதிரியாக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதையும் பதிவு செய்ய வேண்டும் என்று இச்சட்டத்தின் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இந்த சட்டத்தின் கீழ் உள்ள விதிகள் உள்ளிட்டவை குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய இணையதளத்தையும் முதல்வர் தாமி தொடங்கி வைத்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்