நீட் முறைகேடு.. ஆய்வு நடத்த 7 பேர் கொண்ட உயர் மட்டக் குழு.. மத்திய அரசு உத்தரவு

Jun 22, 2024,06:19 PM IST

டெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடு முழுவதும் கடும் கண்டனமும், எதிர்ப்பும், போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் இந்த முறைகேடு குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் தேர்வு முறையில் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்யலாம் என்பது குறித்தும் அரசுக்குப் பரிந்துரைக்க 7 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை மத்திய  அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது.


முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ண் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையில் என்ன மாற்றம் தேவை, தேர்வை நியாயமாகவும், முறையாகவும் நடத்தத் தேவையான பரிந்துரைகள், தேசிய டெஸ்டிங் ஏஜென்சியை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த உயர் மட்டக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும்.  2 மாத காலத்திற்குள் தங்களது பரிந்துரையை அளிக்குமாறு உயர் மட்டக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம்:




1. டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் தலைவர், இஸ்ரோ)


2. டாக்டர் ரந்தீப் குலேரியா (முன்னாள் இயக்குநர், டெல்லி எய்ம்ஸ்)


3. பேராசிரியர் பி.ஜே. ராவ் (ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்)


4. பேராசிரியர் கே. ராமமூர்த்தி (பேராசிரியர், சென்னை ஐஐடி)


5. பங்கஜ் பன்சால் (கர்மயோகி பாரத் வாரிய உறுப்பினர், பீப்பிள் ஸ்டிராங் அமைப்பின் இணை நிறுவனர்)


6. பேராசிரியர் ஆதித்யா மிட்டல் (ஐஐடி டெல்லி, டீன்)


7. கோவிந்த் ஜெய்ஸ்வால் (மத்திய கல்வித்துறை இணைச் செயலாளர்)


உயர் மட்டக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன், இஸ்ரோ அமைப்பின் தலைவராக செயல்பட்டவர். தற்போது கான்பூர் ஐஐடியின் கவர்னர் போர்டு தலைவராக இருக்கிறார். மேலும் ஐஐடி கவுன்சிலின் தலைவராகவும் இருக்கிறார். மத்திய அரசின் கல்வித்துறையின் பல்வேறு  செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.  இந்தியாவின் சந்திரயான் 1 திட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.  கடந்த 2014ம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 


நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் தினந்தோறும் புதுப் புதுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன. உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் மத்திய அரசு நீட் முறைகேடுகள் தொடர்பாக உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மனம்...!

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

அன்று பல்லவர் பூமி.. இன்று பலரது பூமி.. சீர்மிகு செங்கல்பட்டு!

news

பெண் பிள்ளைகள் - இந்த மண் பிள்ளைகள்.. தேசிய பெண் குழந்தைகள் தினம்!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

news

தொடர்ந்து மக்களை புலம்ப வைத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

அதிகம் பார்க்கும் செய்திகள்