நீட் முறைகேடு.. ஆய்வு நடத்த 7 பேர் கொண்ட உயர் மட்டக் குழு.. மத்திய அரசு உத்தரவு

Jun 22, 2024,06:19 PM IST

டெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடு முழுவதும் கடும் கண்டனமும், எதிர்ப்பும், போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் இந்த முறைகேடு குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் தேர்வு முறையில் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்யலாம் என்பது குறித்தும் அரசுக்குப் பரிந்துரைக்க 7 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை மத்திய  அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது.


முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ண் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையில் என்ன மாற்றம் தேவை, தேர்வை நியாயமாகவும், முறையாகவும் நடத்தத் தேவையான பரிந்துரைகள், தேசிய டெஸ்டிங் ஏஜென்சியை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த உயர் மட்டக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும்.  2 மாத காலத்திற்குள் தங்களது பரிந்துரையை அளிக்குமாறு உயர் மட்டக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம்:




1. டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் தலைவர், இஸ்ரோ)


2. டாக்டர் ரந்தீப் குலேரியா (முன்னாள் இயக்குநர், டெல்லி எய்ம்ஸ்)


3. பேராசிரியர் பி.ஜே. ராவ் (ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்)


4. பேராசிரியர் கே. ராமமூர்த்தி (பேராசிரியர், சென்னை ஐஐடி)


5. பங்கஜ் பன்சால் (கர்மயோகி பாரத் வாரிய உறுப்பினர், பீப்பிள் ஸ்டிராங் அமைப்பின் இணை நிறுவனர்)


6. பேராசிரியர் ஆதித்யா மிட்டல் (ஐஐடி டெல்லி, டீன்)


7. கோவிந்த் ஜெய்ஸ்வால் (மத்திய கல்வித்துறை இணைச் செயலாளர்)


உயர் மட்டக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன், இஸ்ரோ அமைப்பின் தலைவராக செயல்பட்டவர். தற்போது கான்பூர் ஐஐடியின் கவர்னர் போர்டு தலைவராக இருக்கிறார். மேலும் ஐஐடி கவுன்சிலின் தலைவராகவும் இருக்கிறார். மத்திய அரசின் கல்வித்துறையின் பல்வேறு  செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.  இந்தியாவின் சந்திரயான் 1 திட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.  கடந்த 2014ம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 


நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் தினந்தோறும் புதுப் புதுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன. உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் மத்திய அரசு நீட் முறைகேடுகள் தொடர்பாக உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்