நீட் முறைகேடு.. ஆய்வு நடத்த 7 பேர் கொண்ட உயர் மட்டக் குழு.. மத்திய அரசு உத்தரவு

Jun 22, 2024,06:19 PM IST

டெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடு முழுவதும் கடும் கண்டனமும், எதிர்ப்பும், போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் இந்த முறைகேடு குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் தேர்வு முறையில் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்யலாம் என்பது குறித்தும் அரசுக்குப் பரிந்துரைக்க 7 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை மத்திய  அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது.


முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ண் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையில் என்ன மாற்றம் தேவை, தேர்வை நியாயமாகவும், முறையாகவும் நடத்தத் தேவையான பரிந்துரைகள், தேசிய டெஸ்டிங் ஏஜென்சியை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த உயர் மட்டக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும்.  2 மாத காலத்திற்குள் தங்களது பரிந்துரையை அளிக்குமாறு உயர் மட்டக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம்:




1. டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் தலைவர், இஸ்ரோ)


2. டாக்டர் ரந்தீப் குலேரியா (முன்னாள் இயக்குநர், டெல்லி எய்ம்ஸ்)


3. பேராசிரியர் பி.ஜே. ராவ் (ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்)


4. பேராசிரியர் கே. ராமமூர்த்தி (பேராசிரியர், சென்னை ஐஐடி)


5. பங்கஜ் பன்சால் (கர்மயோகி பாரத் வாரிய உறுப்பினர், பீப்பிள் ஸ்டிராங் அமைப்பின் இணை நிறுவனர்)


6. பேராசிரியர் ஆதித்யா மிட்டல் (ஐஐடி டெல்லி, டீன்)


7. கோவிந்த் ஜெய்ஸ்வால் (மத்திய கல்வித்துறை இணைச் செயலாளர்)


உயர் மட்டக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன், இஸ்ரோ அமைப்பின் தலைவராக செயல்பட்டவர். தற்போது கான்பூர் ஐஐடியின் கவர்னர் போர்டு தலைவராக இருக்கிறார். மேலும் ஐஐடி கவுன்சிலின் தலைவராகவும் இருக்கிறார். மத்திய அரசின் கல்வித்துறையின் பல்வேறு  செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.  இந்தியாவின் சந்திரயான் 1 திட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.  கடந்த 2014ம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 


நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் தினந்தோறும் புதுப் புதுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன. உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் மத்திய அரசு நீட் முறைகேடுகள் தொடர்பாக உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்