டெல்லி: 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் மோடி அரசின் முதல் பட்ஜெட் வருகிற 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். அதேபோல நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள 7வது பட்ஜெட்டும் கூட.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இது 3வது மோடி அரசாகும். இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் வருகிற 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஜூலை 22ம் தேதி நாடாளுமன்றம் கூடும். அன்றைய தினம் பொருளாதார நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து 23ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
இது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். அதேபோல நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப் போகும் 7வது பட்ஜெட் இது. 3வது மோடி அரசின் முதலாவது பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் ஏராளம் உள்ளன. பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து வருடங்களாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவி வகித்து வந்தது. இதில் முதல் ஆட்சியின்போது அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தார். அடுத்த 2வது ஆட்சியில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சரானார். அப்போது அவர் 5 முறை பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார். அது 6வது பட்ஜெட்டாகும். தற்போது அவர் முழு அளவிலான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இது அவருக்கு 7வது பட்ஜெட்டாகும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யப்போகும் 13வது மத்திய பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}