டெல்லி: 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் மோடி அரசின் முதல் பட்ஜெட் வருகிற 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். அதேபோல நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள 7வது பட்ஜெட்டும் கூட.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இது 3வது மோடி அரசாகும். இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் வருகிற 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.

அதன்படி ஜூலை 22ம் தேதி நாடாளுமன்றம் கூடும். அன்றைய தினம் பொருளாதார நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து 23ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
இது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். அதேபோல நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப் போகும் 7வது பட்ஜெட் இது. 3வது மோடி அரசின் முதலாவது பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் ஏராளம் உள்ளன. பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து வருடங்களாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவி வகித்து வந்தது. இதில் முதல் ஆட்சியின்போது அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தார். அடுத்த 2வது ஆட்சியில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சரானார். அப்போது அவர் 5 முறை பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார். அது 6வது பட்ஜெட்டாகும். தற்போது அவர் முழு அளவிலான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இது அவருக்கு 7வது பட்ஜெட்டாகும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யப்போகும் 13வது மத்திய பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}