டெல்லி: மத்திய இணை அமைச்சர் எல். முருகன், வருகிற லோக்சபா தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை மீண்டும் ராஜ்யசபா எம்.பியாக்க பாஜக முடிவு செய்துள்ளது.
மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக இருக்கிறார் எல். முருகன். கடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது அவர் மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார். அப்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். மத்திய அமைச்சரும் ஆனார்.

அவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து மீண்டும் அவரை ராஜ்யசபா வேட்பாளராக பாஜக மேலிடம் அறிவித்தது. மத்தியப் பிரதேசத்திலேயே அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
முன்னதாக வருகிற லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் நீலகிரி தொகுதியில் அவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை எதிர்த்துப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவினரும் அங்கு தீவிரமாக களப் பணியாற்றி வந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக மீண்டும் ராஜ்யசபா எம்.பியாகவுள்ளார் எல். முருகன்.
அதேபோல, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆதரவுடன் அவர் தேர்தலில் போட்டியிடுவார்.
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
{{comments.comment}}