விடாமல் தொல்லை கொடுத்த நபர்.. உறவின்போது வாயைப் பொத்தி.. கழுத்தை நெரித்துக் காலி செய்த பெண்!

Feb 03, 2025,03:56 PM IST

பரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில், தன்னை உறவுக்கு வருமாறு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்த நபரை, உறவு கொள்ள அழைத்து, பாதி உறவின்போது அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டார் ஒரு பெண். 32 வயதான அந்தப் பெண்ணை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.


கொல்லப்பட்ட நபரின் பெயர் இக்பால். கொலை. இவர் ஒரு எம்பிராய்டரி கலைஞர் ஆவார். சம்பந்தப்பட்ட பெண்ணின் கிராமத்துக்கு தொழில் நிமித்தம் அடிக்கடி செல்வார் இக்பால். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கும், இக்பாலுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாகப் பழக ஆரம்பித்தனர். செல்போன் எண்களையும் பரிமாறிக் கொண்டனர்.


ஒரு நாள் தனது வீட்டுக்கு வருமாறு கூறி அழைத்துள்ளார் இக்பால். அந்தப் பெண்ணும் இக்பால் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென உறவுக்கு வருமாறு அழைத்துள்ளார் இக்பால். இதை எதிர்பாராத அந்தப் பெண் மறுப்பு தெரிவித்தாராம். ஆனால் இக்பால் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்தப் பெண், இப்படிப் பேசினால், எனது கணவரிடம் கூறி விடுவேன் என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட இக்பால் கோபமடைந்து, நீ என்னுடன் போனில் பேசிய பதிவெல்லாம் இருக்கிறது. அதை உன் கணவரிடம் நான் காட்டி விடுவேன் என்று பதிலுக்கு மிரட்டியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவரது ஆசைக்கு உடன்பட்டுள்ளார்.




அதைத் தொடர்ந்து இக்பால் அடிக்கடி அந்தப் பெண்ணை வற்புறுத்தியும், மிரட்டியும் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் எரிச்சலடைந்தார். இதற்கு மேலும் இப்படி நடந்து கொள்ள அவருக்கு விருப்பமில்லை. இந்தநிலையில் தான் கடந்த புதன்கிழமையன்று இக்பால் தனது மனைவியை மாமனார் வீட்டில் விடப் போயிருந்தார். அவருக்குப் போன் செய்த இப்பெண், உன்னை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இரவில் வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார் இக்பால்.


அதன்படி இரவு 8 மணி போல தனது கணவருக்கு தூக்க மாத்திரையைப் போட்டுக் கொடுத்துள்ளார் இப்பெண். அவரது கணவர் செல்போன் பார்த்து விட்டு இரவு 11.40 மணி போல இக்பாலுக்குப் போன் செய்தார். அவரோ, தான் வீட்டில் தனியாகத்தான் இருப்பதாக கூறி அங்கு வரக் கூறியுள்ளார்.  அங்கு சென்றதும் முதலில் வழக்கம் போல இருவரும் உறவில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். உறவில் ஈடுபட்டு கொஞ்ச நேரம் போனதும், இக்பாலின் இரு கைகளையும் மடக்கிப் பிடித்த அப்பெண் நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து வாயை இறுகப் பொத்தி விட்டு, இன்னொரு கையால் அவரது கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் மூச்சுத் திணறி இக்பால் சில விநாடிகளில் இறந்து விட்டார்.


அவர் இறந்து விட்டதை உறுதி செய்து கொண்ட பின்னர் உடலை இழுத்து வெளியே கொண்டு போய் புதரில் போட்டு விட்டு தனது வீட்டுக்குப் போய் விட்டார் இப்பெண். இக்பாலின் உடல் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விசாரணை நடத்தியதில் இப்பெண் கைது செய்யப்பட்டார். இக்பாலின் தொல்லை தாங்காமல் போனதாலும், தனது குடும்பத்தைக் காக்க வேண்டியிருந்ததாலும் இந்த முடிவுக்கு தான் வந்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளாராம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

news

சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

news

தொடர்ந்து 4வது நாளாக சரிந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,120 குறைவு!

news

தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா.. 2026ல் வரிசையாக களை கட்டப் போகும் சட்டசபைத் தேர்தல்கள்

news

இது தியாகம்.. டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தீவிரவாதி டாக்டர் உமர் பரபரப்பு வீடியோ

news

கார்த்திகை மாத சிவராத்திரி.. நாளை கார்த்திகை அமாவாசை.. அடுத்தடுத்து சிறப்பு!

news

சபரிமலை பக்தர்களே.. மூளை தின்னும் அமீபா அச்சுறுத்தல்.. இதைக் கடைப்பிடிங்க போதும்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 18, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்

news

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்