அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!

Aug 30, 2025,11:54 AM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானது என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது டிரம்பின் வர்த்தக கொள்கைக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. 


IEEPA சட்டத்தின் கீழ் டிரம்ப் இந்த வரிகளை விதித்தார். ஆனால், இந்த சட்டம் அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கும் வகையில் தீர்ப்பு அக்டோபர் 14ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்த தீர்ப்பை டிரம்ப் விமர்சித்துள்ளார். தீர்ப்பை எதிர்த்து நாங்கள் அப்பீல் செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து அவர் கூறுகையில்,  தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும். வரிகளை நீக்கினால், அது அமெரிக்காவிற்கு ஒரு பேரழிவு. இது அமெரிக்க உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த முடிவு உறுதி செய்யப்பட்டால், அமெரிக்காவையே அழித்துவிடும். நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், பெரிய பற்றாக்குறைகள் மற்றும் பிற நாடுகள் விதிக்கும் தடைகளிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வரிகள் அவசியம்.


அனைத்து வரிகளும் இன்னும் அமலில் உள்ளன. உச்சநீதிமன்றம் தலையிட்டு அவற்றை நிலைநிறுத்தும். கடந்த கால அரசியல்வாதிகள் அமெரிக்காவை வர்த்தகத்தின் மூலம் சுரண்ட அனுமதித்து விட்டனர் என்று கூறியுள்ளார் டிரம்ப்.


IEEPA என்றால் என்ன?


IEEPA என்பது International Emergency Economic Powers Act என்பதன் சுருக்கம். நாட்டில் தேசிய அவசர நிலை ஏற்பட்டால் பொருளாதார தடைகள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு சட்டம். இந்த சட்டத்தை பயன்படுத்தி தான் டிரம்ப் பல நாடுகளுக்கு எதிராக வரிகளை விதித்து வருகிறார். இந்தியாவுக்கும் கூட 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார்.


இந்த வரி விதிப்பு மூலம் உலக நாடுகளை மிரட்டி தனது வழிக்கு கொண்டு வர முயன்று வருகிறார் டிரம்ப் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த  சட்டம் டிரம்ப்புக்கு அந்த அதிகாரத்தை வழங்கவில்லை என்று இப்போது கூறியுள்ளது.


இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், டிரம்ப் விதித்த அனைத்து வரிகளும் ரத்து செய்யப்படும். இது அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு குறைந்த விலை கொடுக்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில், அமெரிக்க பொருட்கள் வெளிநாடுகளில் அதிக போட்டி போட வேண்டி இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

news

லன்ச் டைம் வந்துருச்சா.. அதுக்கு முன்னாடி.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. உலக உணவு தினம்!

news

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!

news

புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

news

ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்

news

8 போர்களை நிறுத்திய நான் தான் நோபல் பரிசுக்குத் தகுதியானவன்.. மீண்டும் டிரம்ப் பொறுமல்

news

சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2025... இன்று நன்மைகளை அதிகம் பெறும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்