வாஷிங்டன்: சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால்தான் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் எரிபொருள் பயன்பாடு குறித்து சிக்கணம் கடைப்பிடிக்க தத்தமது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டு வருகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சீனா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக எபிக் பியூரி 2.0 என்ற பெயரில் மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் ராணுவ நிலைகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் தனது அணுஆயுதச் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். சீனாவின் உதவியுடன் இந்தப் பதற்றத்தைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஈரானின் பிடிவாதமான போக்கால் ராணுவ நடவடிக்கையே தீர்வாக இருக்கும் என அமெரிக்க நிர்வாகம் கருதுவதாகத் தெரிகிறது.
ட்ரம்ப்பின் இந்த அதிரடி முடிவு மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் இந்த நேரடித் தலையீடு ஒரு பெரிய போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பிற்குப் பிறகு ட்ரம்ப் எடுத்துள்ள இந்த முடிவு, சர்வதேச அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் திட்டத்தால் வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}