ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் முக்கிய அடையாளமான ஊட்டி, மலை ரயிலின் மீது எருமைகள் மோதியதால் மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இந்த சம்பவத்தால் அசம்பாவிதம் ஏதுமின்றி மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலில் பயணம் செய்து இயற்கையின் அழகை ரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் தினமும் ஆர்வமாக ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அதிகமாக ஊட்டியை நோக்கி அதிக அளவில் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
ஊட்டி மலை ரயிலில் பயணித்து தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர் சுற்றுலா பயணிகள். இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரயில் சென்று கொண்டு இருந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது குன்னூர் ரயில் நிலையத்தை தாண்டி பெர்ன்ஹில் பகுதி அருகே, ரயில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தண்டவாளத்தின் எதிரே நடந்து சென்ற எருமைகள் மீது மோதியது. இதில் ஒரு எருமை மாடு உயிரிழந்தது. மற்றொரு எருமை படுகாயம் அடைந்தது.
தண்டவாளத்தில் எருமை மாடு நிற்பதை கவனித்த ரயிலின் ஓட்டுனர் உடனடியாக பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தி உள்ளார். இதனால் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 200க்கும் மேற்பட்டோர் பயணித்த மலை ரயிலில் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதால் பெரும் அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர். ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகளை மீட்டு பத்திரமாக பஸ் மூலமாக ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர்.
சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}