நோ.. ஹெல்மெட் நோ.. பெட்ரோல்.. உ. பி. அரசு அதிரடி உத்தரவு.. போலீஸுக்கும் தகவல் தர உத்தரவு!

Jan 13, 2025,12:10 PM IST

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்கு சாலை விபத்துகளால் வருடம் தோறும் 26 ஆயிரம் வரை மக்கள் உயிரிழப்பதாகவும், குறிப்பாக பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகள் தான் சாலை விபத்தில்  உயிரிழப்பதாகவும் தகவல் வெளியானது.


இந்த தகவலின் அடிப்படையில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்  நோக்கோடும், விபத்தை குறைப்பதற்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. 




அதில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது. அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். ஹெல்மெட் அணியாமல் அடிக்கடி வாகன ஓட்டிகள் வந்தால் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெட்ரோல் பங்கில் ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்துடன் மிகப் பெரிய பேனர் வைக்க வேண்டும்.


அதேபோல ஹெல்மட் அணியாமல் பெட்ரோல் போட வருவோர் குறித்த தகவலை காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து காவல்துறை கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக சமூக வலைதளங்கள், ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்