ஹர்டோய், உத்தரப் பிரதேசம்: தக்காளியை கொஞ்ச நாளைக்கு சாப்பிடாம இருந்தா தானாக தக்காளி விலை குறையும் என்று சமீபத்தில் தமிழ்நாடு மூத்த பாஜக தலைவர் எச். ராஜா கூறியிருந்தார் இல்லையா.. தற்போது அதேபோல உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவரும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்தபடியே உள்ளது. இதனால் மக்கள் தக்காளி இல்லாமல் சமைக்கவும் முடியாது, தக்காளி வாங்காமல் இருக்கவும் முடியாது என்பதால் திரிசங்கு நிலையில் தத்தளித்து வருகின்றனர். தக்காளி விலை உயர்வு குறித்து சமீபத்தில் மூத்த தலைவர் எச். ராஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தக்காளியை சில நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறையும் என்று கூறியிருந்தார். தற்போது அதே போல உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் பிரதீபா சுக்லா என்பவரும் கூறியுள்ளார்.
இவர் பெண்கள் வளர்ச்சி மற்றும் சிறார் ஊட்டச்சத்துத்துறை அமைச்சர் ஆவார். இவர் தக்காளி விலை உயர்வை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நூதனமான ஐடியா கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தக்காளி விலை ஜாஸ்தியாக இருந்தால் அதை வீட்டிலேயே மக்கள் வளர்க்க வேண்டும். அப்படி செய்தால் தக்காளியை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது.
தக்காளியை சாப்பிடுவதை நிறுத்துங்கள். விலை தானாக குறையப் போகுது. அதுக்குப் பதில் எலுமிச்சம் பழம் சாப்பிடுங்க. யாருமே தக்காளியை சாப்பிடாவிட்டால் விலை குறையப் போகிறது என்று கேஷுவலாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தின் அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெண்கள் தாங்களே அனைத்தையும் விளைவித்துக் கொள்கிறார்கள். இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அனைவரும் செய்ய வேண்டும். எப்பவுமே தக்காளி விலை அதிகம்தான். நாமே விளைவித்தால் இதை சமாளிக்கலாம். விலை உயரும்போது சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்தலாம். மாற்று யோசனைகளைக் கடைப்பிடிக்கலாம் என்றார் அவர்.
என்ன மக்களே உங்களோட கருத்து என்ன?
நடுநிலயான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
{{comments.comment}}