ஹர்டோய், உத்தரப் பிரதேசம்: தக்காளியை கொஞ்ச நாளைக்கு சாப்பிடாம இருந்தா தானாக தக்காளி விலை குறையும் என்று சமீபத்தில் தமிழ்நாடு மூத்த பாஜக தலைவர் எச். ராஜா கூறியிருந்தார் இல்லையா.. தற்போது அதேபோல உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவரும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்தபடியே உள்ளது. இதனால் மக்கள் தக்காளி இல்லாமல் சமைக்கவும் முடியாது, தக்காளி வாங்காமல் இருக்கவும் முடியாது என்பதால் திரிசங்கு நிலையில் தத்தளித்து வருகின்றனர். தக்காளி விலை உயர்வு குறித்து சமீபத்தில் மூத்த தலைவர் எச். ராஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தக்காளியை சில நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறையும் என்று கூறியிருந்தார். தற்போது அதே போல உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் பிரதீபா சுக்லா என்பவரும் கூறியுள்ளார்.
இவர் பெண்கள் வளர்ச்சி மற்றும் சிறார் ஊட்டச்சத்துத்துறை அமைச்சர் ஆவார். இவர் தக்காளி விலை உயர்வை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நூதனமான ஐடியா கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தக்காளி விலை ஜாஸ்தியாக இருந்தால் அதை வீட்டிலேயே மக்கள் வளர்க்க வேண்டும். அப்படி செய்தால் தக்காளியை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது.
தக்காளியை சாப்பிடுவதை நிறுத்துங்கள். விலை தானாக குறையப் போகுது. அதுக்குப் பதில் எலுமிச்சம் பழம் சாப்பிடுங்க. யாருமே தக்காளியை சாப்பிடாவிட்டால் விலை குறையப் போகிறது என்று கேஷுவலாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தின் அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெண்கள் தாங்களே அனைத்தையும் விளைவித்துக் கொள்கிறார்கள். இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அனைவரும் செய்ய வேண்டும். எப்பவுமே தக்காளி விலை அதிகம்தான். நாமே விளைவித்தால் இதை சமாளிக்கலாம். விலை உயரும்போது சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்தலாம். மாற்று யோசனைகளைக் கடைப்பிடிக்கலாம் என்றார் அவர்.
என்ன மக்களே உங்களோட கருத்து என்ன?
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}