உன்னை அறிந்தால்!

May 18, 2026,11:30 AM IST

- வே.ஜெயந்தி


உன்னை அறிந்தால்

உலகம் சிறு துளியாகும்;

உள்ளம் தெளிந்தவுடன்

கவலைகள் காற்றில் கரையும்.


வானம் எனும் பரந்த கூரையின் கீழ்,

பூமி எனும் இல்லத்தில்

அனைவரும் ஒரே பயணிகள் என்பதை

ஆன்மா அமைதியாக உணரும்.


இறைவன் அருளிய இந்த உடல்

காற்று நிரம்பிய ஓர் பைதான்;

ஆனால் அதற்குள் ஒளிர்வது

உன் உள்ளத்தின் உண்மை அழகு.




தெளிந்த சிந்தனையும்

தூய அன்பின் நினைவுகளும்

மனித வாழ்வை மணக்கும்

மலர்களாய் மலர்கின்றன.


உன்னை நீ உணர்ந்த நாளில்

வாழ்க்கை சுமையாய் தோன்றாது;

அது அமைதியின் அர்த்தமாய்

ஆழத்தில் மலர்ந்து நிற்கும்.


(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி

news

"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!

news

"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

news

யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

news

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!

news

அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?

news

தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

news

Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??

அதிகம் பார்க்கும் செய்திகள்