உன்னை அறிந்தால்!

May 18, 2026,11:30 AM IST

- வே.ஜெயந்தி


உன்னை அறிந்தால்

உலகம் சிறு துளியாகும்;

உள்ளம் தெளிந்தவுடன்

கவலைகள் காற்றில் கரையும்.


வானம் எனும் பரந்த கூரையின் கீழ்,

பூமி எனும் இல்லத்தில்

அனைவரும் ஒரே பயணிகள் என்பதை

ஆன்மா அமைதியாக உணரும்.


இறைவன் அருளிய இந்த உடல்

காற்று நிரம்பிய ஓர் பைதான்;

ஆனால் அதற்குள் ஒளிர்வது

உன் உள்ளத்தின் உண்மை அழகு.




தெளிந்த சிந்தனையும்

தூய அன்பின் நினைவுகளும்

மனித வாழ்வை மணக்கும்

மலர்களாய் மலர்கின்றன.


உன்னை நீ உணர்ந்த நாளில்

வாழ்க்கை சுமையாய் தோன்றாது;

அது அமைதியின் அர்த்தமாய்

ஆழத்தில் மலர்ந்து நிற்கும்.


(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்