- வே.ஜெயந்தி
உன்னை அறிந்தால்
உலகம் சிறு துளியாகும்;
உள்ளம் தெளிந்தவுடன்
கவலைகள் காற்றில் கரையும்.
வானம் எனும் பரந்த கூரையின் கீழ்,
பூமி எனும் இல்லத்தில்
அனைவரும் ஒரே பயணிகள் என்பதை
ஆன்மா அமைதியாக உணரும்.
இறைவன் அருளிய இந்த உடல்
காற்று நிரம்பிய ஓர் பைதான்;
ஆனால் அதற்குள் ஒளிர்வது
உன் உள்ளத்தின் உண்மை அழகு.

தெளிந்த சிந்தனையும்
தூய அன்பின் நினைவுகளும்
மனித வாழ்வை மணக்கும்
மலர்களாய் மலர்கின்றன.
அது அமைதியின் அர்த்தமாய்
ஆழத்தில் மலர்ந்து நிற்கும்.
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}