- வே. ஜெயந்தி
இன்று பலருக்கும் தெரியாத
ஒரு உண்மை இருக்கிறது…
“மக்களாட்சி” என்றால்
மக்கள் ஆளும் ஆட்சி என்று சொல்கிறோம்.
ஆனால்—
சிலருக்கு அது பலம்,
சிலருக்கு அது பயம்,
சிலருக்கு அது
அதிகாரத்தின் மயக்கம்.
“நான்தான் இந்த நாட்டை ஆளப்போகிறேன்”
என்று குடிமகன் நினைக்கும் மயக்கமா மக்களாட்சி?
அல்லது…

“நானும் ஓர் மக்கள் தான்;
எனக்கும் சுதந்திரம் வேண்டும்.
என் குரலுக்கும் மதிப்பு வேண்டும்.
என் உரிமைக்கும் பாதுகாப்பு வேண்டும்.”
என்று கேட்கும்
ஒரு சாதாரண மனிதனின் குரலா மக்களாட்சி?
தத்துவஞானி புன்னகைத்தார்…
“மக்களாட்சி என்பது
மக்களை ஆள்வது அல்ல;
மக்களின் குரலைக் கேட்பது.”
அதிகாரம் கிடைத்தவனுக்கு
அது பெருமை அல்ல—
பொறுப்பு.
பதவி கிடைத்தவனுக்கு
அது உரிமை அல்ல—
கடமை.
மக்களாட்சி உண்மையாகும் நாள்,
ஒருவன் மற்றொருவனை ஆளும் நாள் அல்ல…
ஒவ்வொரு மனிதனும்
தன் குரலோடு
நிமிர்ந்து நிற்கும் நாள்!
அதுதான்
உண்மையான மக்களாட்சி.
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
{{comments.comment}}