ஒன்றாய் நிற்கும் ஒளி!

Feb 05, 2026,03:32 PM IST

- வே.ஜெயந்தி


ஒன்றாய் நிற்கும் ஒளி 

கடவுள் தந்த ஞான ஒளி.


மாணவர்களின் உள்ளத்தில்

வந்து மெதுவாய் ஒளிரும் போது,


ஆசிரியரின் அருமை

அர்த்தம் பெற்று தெரிகிறது.


பெற்றோரின் கண்களில்

பெருமையாகப் பிரகாசிக்கும் அந்த நொடியில்

பள்ளி முழுவதும் ஒலிக்கிறது

ஆனந்த ராகம்.




அந்த ராகத்தில்

நேற்றைய வலிகள் மறைந்து,

இன்றைய கனவுகள்

இசையாக மாறுகின்றன.


இது சுமையா?

இல்லை  இது பொறுப்பு;

நாளையை உருவாக்கும்

புனித பொறுப்பு.


பெற்றோரின் கடமை,

ஆசிரியரின் அர்ப்பணம்,

மாணவரின் முயற்சி 

மூன்றும் ஒன்றானால்,

உலகமே ஒளிரும்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!

news

நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day

news

தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை

news

நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்