- வே.ஜெயந்தி
உலகத்தை படைத்தவர் இறைவன்,
அவர் என்ன எழுதி வைத்து படைத்துள்ளார்
என்பதை அறியாமல்
சிந்தனை செய்து வாழ்கிறோம்.
“இது தான் வாழ்க்கை,
இது தான் உலகம்”
என்று உணர்ந்தால்
இவ்வுலகில் துன்பம் இல்லை.
மனதில் நிம்மதி மலரும்,
மனிதரில் அன்பு பெருகும்,
பொய்கள் அனைத்தும் விலகி
உண்மை மட்டும் நிலைக்கும்.
ஏற்றத் தாழ்வற்ற உலகை உருவாக்க
உண்மையை உரைப்போம்,
அன்பை விதைப்போம்,
அமைதியை வளர்ப்போம்.

பகை மறையும்,
பாசம் மலரும்,
பிரிவு கரையும்,
ஒற்றுமை வளரும்.
கண்களில் கருணை பிறக்கும்,
கைகளில் உதவி நீளும்,
இதயங்கள் இணைந்தால்
இவ்வுலகம் சொர்க்கமாகும்.
மனிதன் மனிதனாக வாழும்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}