இவ்வளவு தான் உலகம்…!

Apr 03, 2026,03:49 PM IST

- வே.ஜெயந்தி


உலகத்தை படைத்தவர் இறைவன்,  

அவர் என்ன எழுதி வைத்து படைத்துள்ளார்  

என்பதை அறியாமல்  

சிந்தனை செய்து வாழ்கிறோம்.


“இது தான் வாழ்க்கை,  

இது தான் உலகம்”  

என்று உணர்ந்தால்  

இவ்வுலகில் துன்பம் இல்லை.


மனதில் நிம்மதி மலரும்,  

மனிதரில் அன்பு பெருகும்,  

பொய்கள் அனைத்தும் விலகி  

உண்மை மட்டும் நிலைக்கும்.


ஏற்றத் தாழ்வற்ற உலகை உருவாக்க  

உண்மையை உரைப்போம்,  

அன்பை விதைப்போம்,  

அமைதியை வளர்ப்போம்.




பகை மறையும்,  

பாசம் மலரும்,  

பிரிவு கரையும்,  

ஒற்றுமை வளரும்.


கண்களில் கருணை பிறக்கும்,  

கைகளில் உதவி நீளும்,  

இதயங்கள் இணைந்தால்  

இவ்வுலகம் சொர்க்கமாகும்.


அப்போது தான் உலகம்  

உண்மையில் அழகாகும்…  

மனிதன் மனிதனாக வாழும்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி

news

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு

news

"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி

news

அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்

news

வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)

news

ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு

news

Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!

news

ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!

news

2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!

அதிகம் பார்க்கும் செய்திகள்