யாரை நம்பலாம்!

Jun 05, 2026,03:40 PM IST

- வே.ஜெயந்தி


அகத்தில் அன்புடனும்

முகத்தில் உண்மையான

புன்னகை புரிவோரை

நம்பலாம்.


நேற்று ஒரு பேச்சு, இன்று

ஒரு பேச்சு, நாளை ஒரு

பேச்சு என்று இல்லாமல்,

எப்போதும் ஒரே பேச்சு

பேசுவோரை நம்பலாம்.




மலர் ஒருநாளும்

தன்னை அழைப்பதில்லை;

அதன் அழகினாலே

அனைவரையும் ஈர்க்கும்.


அதுபோல் நாளும் நல்ல நாள்,

அனைவரும் நல்லவர்கள்

என்ற எண்ணம் வேண்டும்.


அன்பும் உண்மையும் இருந்திடில்

வாழ்க்கை அழகாகும்;

நல்ல மனம் கொண்டோரிடம்

நம்பிக்கை நிலையாகும்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்