டெல்லி: இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் முடிய இருப்பதால், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி நாராயணனை நியமித்துள்ளது மத்திய அரசு. அரசுப் பள்ளியில் படித்து தனது திறமையாலும், கடும் உழைப்பாலும் இந்த உயரிய நிலையை அவர் எட்டியுள்ளது பெருமைக்குரியது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இஸ்ரோ தலைவராகும் 2வது விஞ்ஞானி வி. நாராயணன்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் இஸ்ரோ, அமெரிக்கா, ரஷ்யா போன்ற விண்வெளி ஆய்வு சக்திகளுக்கே சவால் விடும் வகையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. சந்திரயான் திட்டம் மூலமாக ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியது நமது இஸ்ரோ.
இஸ்ரோவின் தலைவராக கேரளாவை சேர்ந்த சோம்நாத் கடந்த 2022 ஆம் ஆண்டு பதவியேற்று தற்போது வரை பணிபுரிந்து வருகிறார். இவரின் பதவிக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவரை நியமித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 14ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார்.
யார் அந்த வி. நாராயணன்..?

வி.நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் எளிமையான குடும்ப பின்னணியில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து இஸ்ரோவில் இணைந்தவர். 40 வருட கால அனுபவம் அவருக்கு உள்ளது. திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சியின் இயக்குனராக பணியற்றி இருக்கிறார்.
இஸ்ரோவில் தமிழகத்தைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றி உள்ளனர். அனேகமாக அனைத்து முக்கியத் திட்டங்களிலும் தமிழர்களே முக்கியப் பங்காற்றியுள்ளது கூடுதல் பெருமையாகும். குறிப்பாக ரோகினி 2 செயற்கைக்கோள் திட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முக்கியப் பங்கு வகித்தார். சந்திரயான்-1 திட்டக் குழுவின் இயக்குனராக செயல்பட்டவர் மயில்சாமி அண்ணாதுரை. சந்திரயான் 2 திட்டக்குழு இயக்குனராக வனிதா முத்தையா மற்றும் சந்திரயான் 3 திட்டக்குழு இயக்குனராக வீர முத்துவேல், இஷா 2 விண்கலத்தின் திட்ட இயக்குனராக நா. வளர்மதி மற்றும் இஸ்ரோ தலைவராக கே.சிவன், ஆதித்யா எல் ஒன் திட்ட இயக்குனராக நிகர்ஷாஜி ஆகியோர் தங்களின் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த வி நாராயணனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ தலைவராக பதவியேற்கவுள்ள வி. நாராயணன் 2 ஆண்டு காலம் அப்பதவியில் நீடிப்பார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}