டெல்லி: இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் முடிய இருப்பதால், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி நாராயணனை நியமித்துள்ளது மத்திய அரசு. அரசுப் பள்ளியில் படித்து தனது திறமையாலும், கடும் உழைப்பாலும் இந்த உயரிய நிலையை அவர் எட்டியுள்ளது பெருமைக்குரியது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இஸ்ரோ தலைவராகும் 2வது விஞ்ஞானி வி. நாராயணன்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் இஸ்ரோ, அமெரிக்கா, ரஷ்யா போன்ற விண்வெளி ஆய்வு சக்திகளுக்கே சவால் விடும் வகையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. சந்திரயான் திட்டம் மூலமாக ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியது நமது இஸ்ரோ.
இஸ்ரோவின் தலைவராக கேரளாவை சேர்ந்த சோம்நாத் கடந்த 2022 ஆம் ஆண்டு பதவியேற்று தற்போது வரை பணிபுரிந்து வருகிறார். இவரின் பதவிக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவரை நியமித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 14ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார்.
யார் அந்த வி. நாராயணன்..?

வி.நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் எளிமையான குடும்ப பின்னணியில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து இஸ்ரோவில் இணைந்தவர். 40 வருட கால அனுபவம் அவருக்கு உள்ளது. திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சியின் இயக்குனராக பணியற்றி இருக்கிறார்.
இஸ்ரோவில் தமிழகத்தைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றி உள்ளனர். அனேகமாக அனைத்து முக்கியத் திட்டங்களிலும் தமிழர்களே முக்கியப் பங்காற்றியுள்ளது கூடுதல் பெருமையாகும். குறிப்பாக ரோகினி 2 செயற்கைக்கோள் திட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முக்கியப் பங்கு வகித்தார். சந்திரயான்-1 திட்டக் குழுவின் இயக்குனராக செயல்பட்டவர் மயில்சாமி அண்ணாதுரை. சந்திரயான் 2 திட்டக்குழு இயக்குனராக வனிதா முத்தையா மற்றும் சந்திரயான் 3 திட்டக்குழு இயக்குனராக வீர முத்துவேல், இஷா 2 விண்கலத்தின் திட்ட இயக்குனராக நா. வளர்மதி மற்றும் இஸ்ரோ தலைவராக கே.சிவன், ஆதித்யா எல் ஒன் திட்ட இயக்குனராக நிகர்ஷாஜி ஆகியோர் தங்களின் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த வி நாராயணனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ தலைவராக பதவியேற்கவுள்ள வி. நாராயணன் 2 ஆண்டு காலம் அப்பதவியில் நீடிப்பார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}