தேனி: வைகை அணை நிரம்பி வரும் நிலையில், பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டது. இதையடுத்து வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியுள்ளது. இதனால், தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. 5 மாவட்ட விவசாயத்திற்கும், மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது. இதன் கொள்ளளவு 71 அடியாகும். வட கிழக்கு மழை அதிகரித்து வருதால் அணையின் நீர் மட்டம் 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 70.05 அடியைத் தொட்டது.
இதையடுத்து அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் மூர்த்தி, ஐப. பெரியசாமி, தேனி ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அங்குள்ள மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டு, தற்பொழுது வெளியேற்றப்பட்டு வருகிறது.
வைகையாற்றின் கரையின் ஒரமாக இருக்கும் மக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே வைகை அணையில் இருந்து வருகிற 10ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}