எங்கள் உறக்கத்தை கெடுத்து விட்டு.. உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்.. கவிஞர் வைரமுத்து உருக்கம்!

Mar 26, 2025,08:32 PM IST

சென்னை: எங்கள் உறக்கத்தை கெடுத்து விட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்.. என மறைந்த நடிகர் மனோஜ்க்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.


நடிகரும், இயக்குனருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இறப்பு செய்தி கேட்டு திரை உலகினர் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் முதல்வர் மு. க ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், மநீம தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு  தலைவர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தியில்,




மகனே மனோஜ் மறைந்து விட்டாயா..?


பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதி பருவத்தில் பறந்து விட்டாயா..?


சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா என்று உனக்கு அறிமுக பாடல் எழுதினேனே


சிங்கம் இருக்கப் பிள்ளை நீ போய் விட்டாயே? 


உன் தந்தையை எப்படித் தேற்றவேன்


"எனக்கு கடன் செய்ய கடமைப்பட்டவனே! உனக்கு நான் கடன் செய்வது காலத்தின் கொடுமைடா" என்று தகப்பனை தவிக்க விட்டு தங்கமே இறந்து விட்டாயே?

 

உன் கலைக் கனவுகள் கலந்து கலைந்து விட்டனவா..?


முதுமை- மரணம் இரண்டும் காலத்தின் கட்டாயம் தான். ஆனால் முதுமை வயது பார்த்து வருகிறது; மரணம் வயது பார்த்து வருவதில்லை 


சாவுக்குக் கணக்கில்லை 


எங்கள் உறக்கத்தை கொடுத்து விட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

news

மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!

news

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா

news

10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

news

10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!

news

10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!

news

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931

news

The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்