சென்னை: எங்கள் உறக்கத்தை கெடுத்து விட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்.. என மறைந்த நடிகர் மனோஜ்க்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
நடிகரும், இயக்குனருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இறப்பு செய்தி கேட்டு திரை உலகினர் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் முதல்வர் மு. க ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், மநீம தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தியில்,

மகனே மனோஜ் மறைந்து விட்டாயா..?
பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதி பருவத்தில் பறந்து விட்டாயா..?
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா என்று உனக்கு அறிமுக பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப் பிள்ளை நீ போய் விட்டாயே?
உன் தந்தையை எப்படித் தேற்றவேன்
"எனக்கு கடன் செய்ய கடமைப்பட்டவனே! உனக்கு நான் கடன் செய்வது காலத்தின் கொடுமைடா" என்று தகப்பனை தவிக்க விட்டு தங்கமே இறந்து விட்டாயே?
உன் கலைக் கனவுகள் கலந்து கலைந்து விட்டனவா..?
முதுமை- மரணம் இரண்டும் காலத்தின் கட்டாயம் தான். ஆனால் முதுமை வயது பார்த்து வருகிறது; மரணம் வயது பார்த்து வருவதில்லை
சாவுக்குக் கணக்கில்லை
எங்கள் உறக்கத்தை கொடுத்து விட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.
CSK vs RCB: பிரித்து மேய்ந்த பட்டிதர்.. டிம் டேவிட்.. 250 ரன்களை எப்படித் துரத்தப் போகுது சிஎஸ்கே?
US rescue OP: அமெரிக்க வீரரை ஈரானிலிருந்து மீட்டு விட்டோம்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
48 மணி நேரததிற்குள் தாக்குதல்.. டிரம்ப்பின் மிரட்டல் முட்டாள்தனமானது.. ஈரான் கடும் காட்டம்
Happy Easter.. உயிர்த்தெழுந்தார் எம் தேவன்!
ஏசு பாலன் வருகிறார்!
Sripriya Short stories: பசிக்க விடு, பலமாக வளரும்!
ஈஸ்டர் திருநாள்.. உயிர்த்தெழுந்த நாயகன்!
சிலுவையை மீட்பின் அடையாளமாக்கியவரே!
உயிர்த்தெழுந்த நம்பிக்கை – ஈஸ்டர் திருநாளின் அழகான கதை
{{comments.comment}}