எங்கள் உறக்கத்தை கெடுத்து விட்டு.. உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்.. கவிஞர் வைரமுத்து உருக்கம்!

Mar 26, 2025,08:32 PM IST

சென்னை: எங்கள் உறக்கத்தை கெடுத்து விட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்.. என மறைந்த நடிகர் மனோஜ்க்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.


நடிகரும், இயக்குனருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இறப்பு செய்தி கேட்டு திரை உலகினர் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் முதல்வர் மு. க ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், மநீம தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு  தலைவர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தியில்,




மகனே மனோஜ் மறைந்து விட்டாயா..?


பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதி பருவத்தில் பறந்து விட்டாயா..?


சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா என்று உனக்கு அறிமுக பாடல் எழுதினேனே


சிங்கம் இருக்கப் பிள்ளை நீ போய் விட்டாயே? 


உன் தந்தையை எப்படித் தேற்றவேன்


"எனக்கு கடன் செய்ய கடமைப்பட்டவனே! உனக்கு நான் கடன் செய்வது காலத்தின் கொடுமைடா" என்று தகப்பனை தவிக்க விட்டு தங்கமே இறந்து விட்டாயே?

 

உன் கலைக் கனவுகள் கலந்து கலைந்து விட்டனவா..?


முதுமை- மரணம் இரண்டும் காலத்தின் கட்டாயம் தான். ஆனால் முதுமை வயது பார்த்து வருகிறது; மரணம் வயது பார்த்து வருவதில்லை 


சாவுக்குக் கணக்கில்லை 


எங்கள் உறக்கத்தை கொடுத்து விட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்