கடிகாரம் பாராத உரையாடல் சிலபேருக்கு தான் வாய்க்கும்.. அதில் ஒருவர் தான் ரஜினி.. வைரமுத்து புகழாரம்!

Nov 09, 2024,12:30 PM IST

சென்னை: கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரை சந்திக்க சென்ற கவிஞர் வைரமுத்து  அவர்களுக்குள் நடந்த உரையாடல்களை கவிதை நடையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களே பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி  படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாததால் சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று,  தற்போது நலமாக இருக்கிறார். 


இதனை தொடர்ந்து சிறிது காலம் ஓய்வெடுத்து வருகிறார். கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், ஓய்வெடுத்து வரும் ரஜினிகாந்தை நேரில் சந்திப்பதற்காக வீட்டிற்கு சென்ற வைரமுத்து ரஜினியுடன் நடந்த உரையாடல்களை கவிதை நடையில் தொகுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை:




கடிகாரம் பாராத 

உரையாடல்

சிலபேரோடுதான் வாய்க்கும்


அவருள் ஒருவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்


80நிமிடங்கள்

உரையாடியிருக்கிறோம்


ஒரே ஒரு

‘கிரீன் டீ’யைத் தவிர

எந்த இடைஞ்சலும் இல்லை;

இடைவெளியும் இல்லை


சினிமாவின் அரசியல்

அரசியலின் சினிமா

வாழ்வியல் - சமூகவியல்

கூட்டணிக் கணக்குகள்

தலைவர்கள்

தனிநபர்கள் என்று

எல்லாத் தலைப்புகளும்

எங்கள் உரையாடலில்

ஊடாடி ஓய்ந்தன


எதுகுறித்தும் 

அவருக்கொரு தெளிவிருக்கிறது


தன்முடிவின் மீது

உரசிப் பார்த்து

உண்மை காணும் 

குணம் இருக்கிறது


நான்

அவருக்குச் சொன்ன

பதில்களைவிட

அவர் கேட்ட கேள்விகள்

மதிப்புமிக்கவை


தவத்திற்கு ஒருவர்;

தர்க்கத்திற்கு இருவர்


நாங்கள்

தர்க்கத்தையே

தவமாக்கிக் கொண்டோம்


ஒரு காதலியைப்

பிரிவதுபோல்

விடைகொண்டு வந்தேன்


இரு தரப்புக்கும்

அறிவும் சுவையும் தருவதே

ஆரோக்கியமான சந்திப்பு


அது இது என பதிவிட்டுள்ளார் வைரமுத்து.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

news

Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?

news

2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

news

தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்

news

இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

news

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

news

டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

news

The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு

news

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்