சென்னை: கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரை சந்திக்க சென்ற கவிஞர் வைரமுத்து அவர்களுக்குள் நடந்த உரையாடல்களை கவிதை நடையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களே பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாததால் சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது நலமாக இருக்கிறார்.
இதனை தொடர்ந்து சிறிது காலம் ஓய்வெடுத்து வருகிறார். கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், ஓய்வெடுத்து வரும் ரஜினிகாந்தை நேரில் சந்திப்பதற்காக வீட்டிற்கு சென்ற வைரமுத்து ரஜினியுடன் நடந்த உரையாடல்களை கவிதை நடையில் தொகுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை:
கடிகாரம் பாராத
உரையாடல்
சிலபேரோடுதான் வாய்க்கும்
அவருள் ஒருவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
80நிமிடங்கள்
உரையாடியிருக்கிறோம்
ஒரே ஒரு
‘கிரீன் டீ’யைத் தவிர
எந்த இடைஞ்சலும் இல்லை;
இடைவெளியும் இல்லை
சினிமாவின் அரசியல்
அரசியலின் சினிமா
வாழ்வியல் - சமூகவியல்
கூட்டணிக் கணக்குகள்
தலைவர்கள்
தனிநபர்கள் என்று
எல்லாத் தலைப்புகளும்
எங்கள் உரையாடலில்
ஊடாடி ஓய்ந்தன
எதுகுறித்தும்
அவருக்கொரு தெளிவிருக்கிறது
தன்முடிவின் மீது
உரசிப் பார்த்து
உண்மை காணும்
குணம் இருக்கிறது
நான்
அவருக்குச் சொன்ன
பதில்களைவிட
அவர் கேட்ட கேள்விகள்
மதிப்புமிக்கவை
தவத்திற்கு ஒருவர்;
தர்க்கத்திற்கு இருவர்
நாங்கள்
தர்க்கத்தையே
தவமாக்கிக் கொண்டோம்
ஒரு காதலியைப்
பிரிவதுபோல்
விடைகொண்டு வந்தேன்
இரு தரப்புக்கும்
அறிவும் சுவையும் தருவதே
ஆரோக்கியமான சந்திப்பு
அது இது என பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!
TNPSC குரூப் 4 தொடங்கியது.. 3935 பணியிடங்களுக்கு.. 14 லட்சம் பேர் மோதல்.. 4922 மையங்களில் தேர்வு!
அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்
அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
{{comments.comment}}