கடிகாரம் பாராத உரையாடல் சிலபேருக்கு தான் வாய்க்கும்.. அதில் ஒருவர் தான் ரஜினி.. வைரமுத்து புகழாரம்!

Nov 09, 2024,12:30 PM IST

சென்னை: கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரை சந்திக்க சென்ற கவிஞர் வைரமுத்து  அவர்களுக்குள் நடந்த உரையாடல்களை கவிதை நடையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களே பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி  படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாததால் சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று,  தற்போது நலமாக இருக்கிறார். 


இதனை தொடர்ந்து சிறிது காலம் ஓய்வெடுத்து வருகிறார். கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், ஓய்வெடுத்து வரும் ரஜினிகாந்தை நேரில் சந்திப்பதற்காக வீட்டிற்கு சென்ற வைரமுத்து ரஜினியுடன் நடந்த உரையாடல்களை கவிதை நடையில் தொகுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை:




கடிகாரம் பாராத 

உரையாடல்

சிலபேரோடுதான் வாய்க்கும்


அவருள் ஒருவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்


80நிமிடங்கள்

உரையாடியிருக்கிறோம்


ஒரே ஒரு

‘கிரீன் டீ’யைத் தவிர

எந்த இடைஞ்சலும் இல்லை;

இடைவெளியும் இல்லை


சினிமாவின் அரசியல்

அரசியலின் சினிமா

வாழ்வியல் - சமூகவியல்

கூட்டணிக் கணக்குகள்

தலைவர்கள்

தனிநபர்கள் என்று

எல்லாத் தலைப்புகளும்

எங்கள் உரையாடலில்

ஊடாடி ஓய்ந்தன


எதுகுறித்தும் 

அவருக்கொரு தெளிவிருக்கிறது


தன்முடிவின் மீது

உரசிப் பார்த்து

உண்மை காணும் 

குணம் இருக்கிறது


நான்

அவருக்குச் சொன்ன

பதில்களைவிட

அவர் கேட்ட கேள்விகள்

மதிப்புமிக்கவை


தவத்திற்கு ஒருவர்;

தர்க்கத்திற்கு இருவர்


நாங்கள்

தர்க்கத்தையே

தவமாக்கிக் கொண்டோம்


ஒரு காதலியைப்

பிரிவதுபோல்

விடைகொண்டு வந்தேன்


இரு தரப்புக்கும்

அறிவும் சுவையும் தருவதே

ஆரோக்கியமான சந்திப்பு


அது இது என பதிவிட்டுள்ளார் வைரமுத்து.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்