லண்டன்: இசைஞானி இளையராஜாவின் முதலாவது சிம்பொனி இசை வடிவம் இன்று லண்டனில் உள்ள எவன்டிம் அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
மேற்கத்திய சிம்பொனி இசை வடிவத்தில் மிகவும் பிரபலமானவர்கள் மறைந்த இசை மேதைகள் பீத்தோவன் உள்ளிட்ட வெகு சிலரே. இந்த வரிசையில் நம்முடைய இளையராஜாவும் இடம்பெற்று இருப்பது ஒட்டுமொத்த இந்திய இசை ரசிகர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. சிம்பொனி இசை வடிவத்தை முதல் முறையாக ரசிகர்கள் முன்னிலையில் நேரடியாக அரங்கேற்றம் செய்துள்ளார் இசைஞானி இளையராஜா.
மேற்கத்திய இசை வடிவங்களில் ஒன்றான சிம்பொனி இசையை வடிவமைத்த ஆசிய இசையமைப்பாளர்களில் முதலாவது நபராக இசையமைப்பாளர் இளையராஜா விளங்குகிறார். அவரது முதலாவது சிம்பொனி நேரலை நிகழ்ச்சியானது இன்று லண்டனில் உள்ள எவன்ட்டிம் அப்பல்லோ அரங்கில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேறியது.

இளையராஜாவின் சிம்பொனியை நேரில் காண திரண்டிருந்த ரசிகர்கள் மிகவும் நெ கிழ்ச்சியுடன் காணப்பட்டனர். நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து அவர்கள் அரங்கத்திற்குள் நுழைந்தனர். ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இளையராஜா தனது இசைக் குழுவுடன் இணைந்து இந்த சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இந்திய நேரப்படி 2 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது.
வேலியன்ட் என்ற பெயரில் இந்த சிம்பொனியை இளையராஜா உருவாக்கியிருந்தார். இளையராஜாவின் இந்த சிம்பொனி அரங்கேற்றத்தை ஒட்டி தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர்கள் கமல்ஹாசன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகினர் சென்னையில் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிக்கை மூலம் இளையராஜாவை வாழ்த்தி இருந்தார். சாமி உங்களால் இந்த நாட்டுக்கே பெருமை என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இளையராஜாவின் சிம்பொனி இசை உலகை தழுவியுள்ளது . ஈர விழிக் காவியங்கள் என்ற படத்தில் என் கானம் இன்று அரங்கேறும் என்ற பாடலை இளையராஜா பாடியிருப்பார். அது இப்போது மீண்டும் நடந்துள்ளது. எத்தனையோ விதமான இசையைக் கொடுத்துள்ள ராஜாவிடமிருந்து இன்று வெளியாகியுள்ள சிம்பொனி இசை ரசிகர்களிடையே புதிய பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}