- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி

நரைத்த முடியில் அவளின் அழகைப் பார்...!
சுருங்கிய முகத்தில் அவள் பாசத்தினை பார்..!
தளர்ந்த நடையில் அவள் உழைப்பினை பார்..!
சமைத்த உணவில் அவள் அன்பினை பார்...!!
பார்க்கும் பார்வையில் கரிசனம் காட்டு..!!
பேசும் வார்த்தையில் பரிவினை காட்டு..!!
குறைகளை மறந்து நிறைகளைப் பேசு..!!
இருக்கும் வரையில் இனிமையாய் பேசு..!!
அனைத்து உறவுகளும் அற்று போகும்..!
ஆனால் அவன் அன்புமட்டும் நிலையாகும்..!
அகத்தினில் அணையா காதலை சுமந்து..!
வாழ்வாங்கு வாழ்வதே முதுமை காதல்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
வேலே வருக...மனதை உருக வைக்கும் முருகன் வேல் பாடல்
மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை
சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
லிட்டில் இந்தியா வர்த்தக வளர்ச்சிக்கு இளைஞர்கள் பங்களிப்பு அவசியம்.. சிங்கப்பூர் அமைச்சர் புதுச்சேரி
88 லட்சம் கோடி முதலீடு.. சவூதி - அமெரிக்கா உடன்பாடு.. நேட்டோ அல்லாத நாடக சவூதி அங்கீகரிப்பு
LHB கோச்சுடன் நவீனமாக மாறிய.. சேலம் டூ சென்னை எக்ஸ்பிரஸ்.. ரயில்வேக்கு சபாஷ்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
மழையிடம் வரிசைகட்டி நின்றனர்.. எங்கும் மகிழ்ச்சி!
{{comments.comment}}