பிரச்சாரத்துக்குப் போன இடத்தில்.. வீடு புகுந்து.. ரொட்டி சுட்ட வானதி சீனிவாசன்!

May 02, 2023,10:33 AM IST
பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் போன இடத்தில் ஒரு பாஜக பிரமுகரின் வீட்டுக்குள் சென்று அங்கு சோள ரொட்டி சுட்டு அசத்தினார் கோவை தெற்குத்  தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் வானதி சீனிவாசன், பாஜக மகளிர் அணித் தலைவராகவும் இருக்கிறார். இதனால் நாடு முழுவதும் பெரும்பாலும் சுற்றுப் பயணத்திலேயேதான் இருப்பார். தற்போது கர்நாடக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.



இதற்காக பெங்களூரு சென்றிருந்த அவர் அங்கிருந்து கார் மூலம் காலபர்கி என்ற நகருக்குச் சென்றார். அங்கு மகளிர் அணிப் பிரமுகர்களுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பாஜக பெண் பிரமுகர் வீட்டுக்குள் சென்ற அவர் அங்கிருந்தவர்களுடன் பேசினார். பின்னர் அந்த ஊரில் மிகப் பிரபலமான ஜாவார் ரொட்டி அதாவது சோள ரொட்டி பற்றிக் கேள்விப்பட்ட அவர் தானே அதைச் செய்வதாக விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து கிச்சனுக்குள் மகளிர் பட்டாளம் புகுந்தது. எப்படி அந்த ரொட்டியைச் சுட வேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொண்ட வானதி, களத்தில் குதித்தார். ஜாவார் ரொட்டியை கைகளால் தட்டித் தட்டி பின்னர் அதை தோசைச் சட்டியில் போட்டு சுட வேண்டும். நம்ம ஊர் சோள ரொட்டிதான் இது. ஆனால் இந்த  ரொட்டி கர்நாடகத்தில் மிகவும் பிரபலமானது. சும்மா சொல்லக் கூடாது, கன்னடத்துக்காரர்கள் சுடுவது போலவே சூப்பராக சோள ரொட்டியைச் சுட்டுத் தள்ளினார் வானதி சீனிவாசன்.

இதுகுறித்த ஒரு சுவாரஸ்யமான வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார் வானதி சீனிவாசன்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்