விட்டாச்சு லீவு.. சிங்கம் புலி பார்க்கப் போறீங்களா.. வண்டலூர் ஜூ இன்று திறந்திருக்கும்!

May 02, 2023,09:30 AM IST
சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டுத் தேர்வுகள் எல்லாம் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதையடுத்து  மக்கள் குடும்பம் குடும்பமாக அம்மா வீடு, தாத்தா பாட்டி வீடு, உற்றார் உறவினர் வீடுகள், கோடை வாசஸ்தலங்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத்  தலங்களுக்கும் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.



இதனால் கோடை வாசஸ்தலங்கள், சுற்றுலாத்தலங்களில் அரசு சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  சென்னை அருகே உள்ள வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை தோறும் மூடப்படும். ஆனால் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமைகளில் பூங்காவை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விலங்குகளை வேடிக்கை பார்க்க வரும் மக்கள் இன்று வண்டலூர் சென்று மகிழலாம். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் ஹோட்டல் தமிழ்நாடு ரெஸ்டாரென்ட் புத்தம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கேயும் சென்று உணவுகளை ஒரு கை பாருங்கள்.

காலை 9 மணிக்கெல்லாம் பூங்கா திறந்து விடும். மாலை 5 மணி வரை பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழலாம்.மே��ும் விவரங்கள் தேவைப்பட்டால்.. கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.

044-29542301, 044-22750741.
இமெயில்  - support@aazp.in

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்