விட்டாச்சு லீவு.. சிங்கம் புலி பார்க்கப் போறீங்களா.. வண்டலூர் ஜூ இன்று திறந்திருக்கும்!

May 02, 2023,09:30 AM IST
சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டுத் தேர்வுகள் எல்லாம் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதையடுத்து  மக்கள் குடும்பம் குடும்பமாக அம்மா வீடு, தாத்தா பாட்டி வீடு, உற்றார் உறவினர் வீடுகள், கோடை வாசஸ்தலங்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத்  தலங்களுக்கும் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.



இதனால் கோடை வாசஸ்தலங்கள், சுற்றுலாத்தலங்களில் அரசு சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  சென்னை அருகே உள்ள வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை தோறும் மூடப்படும். ஆனால் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமைகளில் பூங்காவை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விலங்குகளை வேடிக்கை பார்க்க வரும் மக்கள் இன்று வண்டலூர் சென்று மகிழலாம். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் ஹோட்டல் தமிழ்நாடு ரெஸ்டாரென்ட் புத்தம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கேயும் சென்று உணவுகளை ஒரு கை பாருங்கள்.

காலை 9 மணிக்கெல்லாம் பூங்கா திறந்து விடும். மாலை 5 மணி வரை பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழலாம்.மே��ும் விவரங்கள் தேவைப்பட்டால்.. கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.

044-29542301, 044-22750741.
இமெயில்  - support@aazp.in

சமீபத்திய செய்திகள்

news

அன்பு.. எத்தனை முறை காயப்பட்டாலும், மூளை அறியும், ஆனால் மனம் கேட்காது!

news

Monday Motivation: வாரீர்! வாரீர்!! பிள்ளைகாள்.. இலக்கணம் எளிதே தமிழ் இலக்கணம் எளிதே!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

அமைதியின் சிகரம் யோகினி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்