விட்டாச்சு லீவு.. சிங்கம் புலி பார்க்கப் போறீங்களா.. வண்டலூர் ஜூ இன்று திறந்திருக்கும்!

May 02, 2023,09:30 AM IST
சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டுத் தேர்வுகள் எல்லாம் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதையடுத்து  மக்கள் குடும்பம் குடும்பமாக அம்மா வீடு, தாத்தா பாட்டி வீடு, உற்றார் உறவினர் வீடுகள், கோடை வாசஸ்தலங்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத்  தலங்களுக்கும் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.



இதனால் கோடை வாசஸ்தலங்கள், சுற்றுலாத்தலங்களில் அரசு சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  சென்னை அருகே உள்ள வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை தோறும் மூடப்படும். ஆனால் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமைகளில் பூங்காவை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விலங்குகளை வேடிக்கை பார்க்க வரும் மக்கள் இன்று வண்டலூர் சென்று மகிழலாம். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் ஹோட்டல் தமிழ்நாடு ரெஸ்டாரென்ட் புத்தம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கேயும் சென்று உணவுகளை ஒரு கை பாருங்கள்.

காலை 9 மணிக்கெல்லாம் பூங்கா திறந்து விடும். மாலை 5 மணி வரை பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழலாம்.மே��ும் விவரங்கள் தேவைப்பட்டால்.. கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.

044-29542301, 044-22750741.
இமெயில்  - support@aazp.in

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்