விட்டாச்சு லீவு.. சிங்கம் புலி பார்க்கப் போறீங்களா.. வண்டலூர் ஜூ இன்று திறந்திருக்கும்!

May 02, 2023,09:30 AM IST
சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டுத் தேர்வுகள் எல்லாம் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதையடுத்து  மக்கள் குடும்பம் குடும்பமாக அம்மா வீடு, தாத்தா பாட்டி வீடு, உற்றார் உறவினர் வீடுகள், கோடை வாசஸ்தலங்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத்  தலங்களுக்கும் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.



இதனால் கோடை வாசஸ்தலங்கள், சுற்றுலாத்தலங்களில் அரசு சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  சென்னை அருகே உள்ள வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை தோறும் மூடப்படும். ஆனால் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமைகளில் பூங்காவை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விலங்குகளை வேடிக்கை பார்க்க வரும் மக்கள் இன்று வண்டலூர் சென்று மகிழலாம். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் ஹோட்டல் தமிழ்நாடு ரெஸ்டாரென்ட் புத்தம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கேயும் சென்று உணவுகளை ஒரு கை பாருங்கள்.

காலை 9 மணிக்கெல்லாம் பூங்கா திறந்து விடும். மாலை 5 மணி வரை பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழலாம்.மே��ும் விவரங்கள் தேவைப்பட்டால்.. கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.

044-29542301, 044-22750741.
இமெயில்  - support@aazp.in

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்