சென்னை: இயக்குனர் அனில் கட்ஸ் இயக்கத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த சபரி திரைப்படம் வரும் 2024, மே 3 ஆம் தேதியன்று பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக தயாராக உள்ளதாம்.
மகா மூவிஸ் தயாரிப்பில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் சபரி திரைப்படத்தை அனில் கட்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகியுள்ளார்.இவர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஆகியவற்றையும் கையாண்டுள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இப்படம் சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடித்து, அதிரடி ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளாராம். மேலும் கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, விவா ராகவா, பிரபு, பத்திரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி, போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அஷ்ரிதா வேமுகந்தி, ஷர்ஷினி கொடுகு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி, நிவேஷா, பேபி கிருத்திகா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வரலட்சுமி நடிப்பில் திர்லராக உருவாகியுள்ள சபரி திரைப்படம் வரும் மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவர தயாராக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாம்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}