கடலூர்: சட்டசபைத் தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என்று நிபந்தனை ஏதும் வைக்கமாட்டோம் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காட்டுமன்னார்கோவிலில் இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து வழங்க வேண்டும். வீராணம் ஏரியை பகுதி பகுதியாக தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை அரசு நிறைவேற்றி தர வேண்டும்.

தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என்று நிபந்தனை ஏதும் வைக்க மாட்டோம். எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என நாங்கள் முன்கூட்டியே நிபந்தனை வைத்ததில்லை.எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிற போது தான் முடிவு செய்வோம். நாங்கள் 2011ல் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டோம். எண்ணிக்கையை பெருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டி இட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்று தான்.
கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதை அனுசரித்து முடிவை நாங்கள் மேற்கொள்வோம். மாநில கட்சிகளின் மீது, மாநில அரசின் மீது அவருக்கு ஒரு ஒவ்வாமை இருக்கிறது. வருகிற ஜனவரி 6ம் தேதி சட்டபேரவை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மறுபடியும் அவர் சட்டப்பேரவையில் வரம்புகளை மீறி நடப்பாரோ என்ன அச்சம் நிலவுகிறது. துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரங்களில் மாநில அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிற நிலையை உருவாக்கியுள்ளார். அவருடைய விருப்பம் போல் முடிவுகளை எடுக்கிறார். இந்த போக்கை விடுதலை சிறுத்தை கட்சி கண்டிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!
DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி
C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!
234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!
Thiruvarur Aazhi Ther: திருவாரூர் தேர் – பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
திருவாரூரில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து வரும் ஆழித்தேர்!
முதல் தோட்டா.....!
{{comments.comment}}