சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு.. திமுகவுக்கு நிபந்தனை விதிக்க மாட்டோம்.. திருமாவளவன்

Dec 23, 2024,07:05 PM IST

கடலூர்: சட்டசபைத் தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என்று நிபந்தனை ஏதும் வைக்கமாட்டோம் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


காட்டுமன்னார்கோவிலில் இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து வழங்க வேண்டும். வீராணம் ஏரியை பகுதி பகுதியாக தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை அரசு நிறைவேற்றி தர வேண்டும்.




தேர்தலில் இவ்வளவு இடங்கள்  வேண்டும் என்று நிபந்தனை ஏதும் வைக்க மாட்டோம். எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என நாங்கள் முன்கூட்டியே நிபந்தனை வைத்ததில்லை.எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிற போது தான் முடிவு செய்வோம். நாங்கள் 2011ல்  தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டோம். எண்ணிக்கையை பெருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டி இட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்று தான்.  


கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதை அனுசரித்து  முடிவை நாங்கள் மேற்கொள்வோம். மாநில கட்சிகளின் மீது, மாநில அரசின் மீது அவருக்கு ஒரு ஒவ்வாமை இருக்கிறது. வருகிற ஜனவரி 6ம் தேதி சட்டபேரவை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மறுபடியும் அவர் சட்டப்பேரவையில் வரம்புகளை மீறி நடப்பாரோ என்ன அச்சம் நிலவுகிறது. துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரங்களில் மாநில அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிற நிலையை உருவாக்கியுள்ளார். அவருடைய விருப்பம் போல் முடிவுகளை எடுக்கிறார். இந்த போக்கை விடுதலை சிறுத்தை கட்சி கண்டிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Women's world cup Finals: ஷெபாலி அதிவேகம்.. தீப்தி சரவெடி.. ரிச்சாவின் மின்னலாட்டம்.. இந்தியா 298!

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்