சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு.. திமுகவுக்கு நிபந்தனை விதிக்க மாட்டோம்.. திருமாவளவன்

Dec 23, 2024,07:05 PM IST

கடலூர்: சட்டசபைத் தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என்று நிபந்தனை ஏதும் வைக்கமாட்டோம் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


காட்டுமன்னார்கோவிலில் இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து வழங்க வேண்டும். வீராணம் ஏரியை பகுதி பகுதியாக தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை அரசு நிறைவேற்றி தர வேண்டும்.




தேர்தலில் இவ்வளவு இடங்கள்  வேண்டும் என்று நிபந்தனை ஏதும் வைக்க மாட்டோம். எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என நாங்கள் முன்கூட்டியே நிபந்தனை வைத்ததில்லை.எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிற போது தான் முடிவு செய்வோம். நாங்கள் 2011ல்  தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டோம். எண்ணிக்கையை பெருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டி இட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்று தான்.  


கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதை அனுசரித்து  முடிவை நாங்கள் மேற்கொள்வோம். மாநில கட்சிகளின் மீது, மாநில அரசின் மீது அவருக்கு ஒரு ஒவ்வாமை இருக்கிறது. வருகிற ஜனவரி 6ம் தேதி சட்டபேரவை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மறுபடியும் அவர் சட்டப்பேரவையில் வரம்புகளை மீறி நடப்பாரோ என்ன அச்சம் நிலவுகிறது. துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரங்களில் மாநில அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிற நிலையை உருவாக்கியுள்ளார். அவருடைய விருப்பம் போல் முடிவுகளை எடுக்கிறார். இந்த போக்கை விடுதலை சிறுத்தை கட்சி கண்டிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்